பார்க்கவ குலமும் முக்குலத்தோர் மக்களும் வெவ்வேறு இனங்களல்ல! ஒருதாய் மக்களே!
பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்:
கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்:
இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.) உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார் என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும் தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்பற்றிய கல்வெட்டு இலக்கிய வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன. பார்க்கவ குலத்தாரின் பட்டங்கள் தஞ்சை கள்ளரில் சில: 1758 வாணாதிராயர் 762 வாணரையர் 1875 , 1765 வாண்டையார் முனையரையர்,1580 மலையமான் 1581 மலையராயர் ,கொங்கராயர்,சேதிராயன்,535 கிளிநாடர் 683 537 கிளியாண்டார், 390 க686 கத்தரியாளியார் 539 கிளிப்பாண்டார் 2342மிலாடுடையார்,1535 மலாடுடையார்,735 நத்தமான்,347உடையான், 1234சேதியராயன்,432வன்னிய நாயகன்,2342பண்டரையர், 454கோவலராயர்,786வாணகோவரையன்,138வாணராயர்6,வாணவிச்சாதிரன், 454காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)612பல்லவராயர்,533அரையதேவன்,1487நாடாழ்வான்
இதைப்போல் பிரான்(மலை) கள்ளர்களும் பாரி மலையமான் இனமே:
தற்போது அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ் பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில் உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும். வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'மழவர்' என்பது மலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும். திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது. காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே: எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது. எனவே பிரமலைக்கள்ளர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் பாடிக்காப்போனாக நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற சீர்மிகு மலையமான் வம்சத்தினரே.
மறவர்களுக்கும் பார்க்கவ மலையமான் குலத்தவருக்குமான இன ஒற்றுமைகள்:
சேதுபதி(செம்பியன்) மன்னர்களும் சிவகங்கை(கௌரி வல்லபர்) மன்னர்களும் பார்க்கவ குலத்தாரைப் போல் உடையார்தேவர் என்று பட்டம் உடையவர்கள் .இந்த பட்டம் எந்த வேறு குலத்தாரிடமும் கிடையாது.பாரி ஆண்ட பிரான்மலையை ஆண்ட அழகன் குமரன் நம்பிராஜன் உடையநயினார்(வீர கேரளன்) பட்டம் உடையவர்.
பண்டாரத்தார்:
பண்டாரத்தார் பட்டம் பார்க்கவ குல உடையாரிடம் உண்டு. சேத்தூர் ஜமீன்-சேவுக பாண்டியத்தேவரும்,கொல்லம்கொண்டான் ஜமீன்-வாண்டாய தேவரும் "வணங்காமுடி பண்டாற மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.
அணஞ்சான்:
பார்க்கவ குலத்தாரிடம் அணஞ்சான் பட்டம் உண்டு: (எ-டு)நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி இது போன்று
சொக்கம்பட்டி ஜமீன் - "செம்புலி" சின்ன அணைஞ்சா தேவர் என்ற பட்டம் உடையவர்.
மறவர்குலத்தவரான அழகு முத்து சேர்வையின் முன்னோராக "உத்தம சோழ கோன் மிலாடுடையார்" என்ற பட்டம் உடையவர். தம் முன்னோரின் பட்டமான சோழ கோன் தான் அழகு முத்து கோனாக மருவியுள்ளது. பார்க்கவ குலத்தில் உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னர் இருந்துள்ளார்.
கொண்டையம் கோட்டை மறவரின் வெட்டுவான்,சேதியர் கிளைகள் சேதியராயரை குறிக்கும். பார்க்கவ குல கத்திக்காரர்கள் வாள்வீமன் கிளையை சார்ந்தவர்கள்.
திருமுடிக்காரியின் நாணயத்தில் பச்சைக் குதிரை முத்திரை உண்டு.சிவகிரி ஜமீனின் சின்னம் குதிரையாகும். மலையமான் வம்சத்தவரிடம் வன்னியநாயகன்,வன்னியர் பட்டம் உண்டு.இது போல் சிவகிரி வன்னிய மறவர்களுக்கு வன்னியர் பட்டம் உண்டு.
இதையெல்லாம் விட மலையமானை சங்க இலக்கியத்தில் "மறப்போர் மலையன்" என்றும் "கூர்வேல் மலையன்","ஒரிவாள் மலையர்" என்றும் கூறுவர்.இது மறவர்களை"நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே, தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர் எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்(புறம்)" ஆதாவது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது என்று கூறுவர்.
இதையெல்லாம் விட மலையமானை திருக்கோவிலூர் சித்தலிங்கமடம் "உத்தம சோழன்" கல்வெட்டில்"சூரியன் மறவனான மலையகுலராஜன்" என கூறியுள்ளது.
ஆதாரம்:
சதிரன் மறவனான ராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன்,
சூரியன் மறவனான மலையகுலராசன்,
சூரியன் பிரமன சகாயனான மலையகுலராசன்,
About 4 records of this volume assigned to Uttamachola have been published in S. I. I., Volume III (Nos. 130, 147, 151 and 151-A). About 22 inscriptions in this collection are assignable to Rajaraja I. No. 412 from Siddhalingamadam dated in the 4th year records a gift made by Maladudaiyan . . . . . . It is not impossible that this Sadiran alias Rajendrasola Malaiyaman is identical with a chief of the same name on whose behalfMalaiyaman Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakula-rajaan of Kiliyurincluded in the same division is stated to have made a gift of 192 cows for two perpetual lamps, to god Tiruvidaikalivalvar of Tirukkovalur in Kurukkaik-kurram in Jananatha-valanadu. It appears as though these two chief were brothers, the former being elder of the two on whose behalf the gift was made, and it might not be wrong to suggest that this chief was a father of Sadiran Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakularajan (S.I.I., Vol. VII, No. 133).
எனவே நாம் மேலே குறிப்பிட்ட கள்ளர்,மறவர்,பார்க்கவகுல உடையார்கள் இவர்கள் யாவரும் இம் மண்ணையாண்ட சேர,சோழ,பாண்டியர் என்னும் மன்னாதி மன்னர் வழி வந்த போர்க்குலத்தவர்களான வீரமரபினரேயாகும்.பார்க்கவ குலத்தார்கள்,கள்ளர்,மறவர்,அகமுடையர் இவர் யாவரும் ஆதி மறக்குடிகளே!!!!
No comments:
Post a Comment