Monday, March 20, 2017

ராஜராஜ சோழன் எனும் கள்வன்

ஓர் முற்றுப்புள்ளி...  (இராஜ இராஜ சோழன் )
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

ஓர் முற்றுப்புள்ளி... வைக்கவே இந்த கட்டுரை.

சோழர்களை சொந்தம் கொண்டாட மிக அழகாய் சில ஆதரங்களைத் திரட்டி வன்னியர்களும் , இன்னும் சில ஜாதிகளும் ( கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமா என்ன? ) போராடிக் கொண்டிருக்கும் இணைய உலகிற்கு இக் கட்டுரை ஓர் முற்றுப்புள்ளி.

.
பொதுவாய் இ(அ)வர்கள் சொந்தம் கொண்டாடுவது இராஜ இராஜனையும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலையும், தமிழின் மற்றும் தமிழனின் தலையாக/ முதல் குடும்பமாக காட்டிக் கொள்ள.. மட்டுமே!!!   என்பது வேதனை அல்லவா ?.

ராஜ ராஜ சோழன் இவர்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் என்பதை அறிவித்தவர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர்.

அதற்கு முன் எங்கு போனார்கள் இந்த சாதிக் கூட்டம் ?  நம் ராஜ ராஜனை தூக்கி தலையில் வைத்து கொள்ளாது ஏன்?

சரி போகட்டும் வரலாற்றில் எத்துனை ராஜ ராஜ சோழர்கள் உண்டு என்பதாவது அந்த இன்டெர்னெட் எழுத்தாளர்களுக்கு தெரியுமோ ? .......

சரி அதுவும் பரவாயில்லை.!

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை கள்ளர் நாடுகள் உள்ளன என்று அறிவாரோ ?...

சரி அதுவும் பரவாயில்லை.!

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல ஆயிரம் ஆயிரம் அந்தணர்களுக்கு எத்துனை காவிரி கரை கிராமங்கள் தானமாக  வழங்கபட்டன அறிவாரோ ?..

அப்படி வழங்கப்பட்ட கிராமங்கள் எல்லாம் காவிரி மற்றும் துணை ஆறுகளின் கிழக்கின் கரையிலேயே அமைந்தவை என்பதை அவர்தான் அறிவாரோ ?..

அப்படிப் பெறப்பட்ட நிலங்களை உழுதவர் யார் ? விளைத்தவர் யார் ? தொண்டை மண்டலத்திலிருந்து குடியேறியவர் யார் ?

சரி போகட்டும்.!

கள்ளர் குல பட்டங்கள் நூறாண்டு நூறாண்டு கடந்து இன்றும் வழங்கி வருகிறோமே ? நீவிர் அங்ஙனம் கொண்டதுண்டோ ? பின் எதற்காக இந்த விளம்பர பேராசை.?

குல பட்டங்கள் முக்குலத்து உறவுகள் எங்கிருந்தாலும் வழி வழியாய் பாட்டன் கொடுத்தது. நாங்கள் அதை வழங்கி வர நீங்கள் எப்படி தகுதியாவீர்கள் ?..

சரி ! ..கள்ளரில் "வன்னியர்" என்ற பட்ட பெயருண்டு. உடையார் என்ற பட்ட பெயரும் முண்டு.

இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்.?

உங்களை உசுப்பேற்றும் வேலையில்லாத வெட்டி ஆராய்ச்சியாளர்கள் தான் வாழ்வதற்க்கு காசு பெற எதையாவது சொல்லி வைப்பார்கள். கேட்டுக் கொண்டு நீங்களும் ஆடுகிறீர்களே ?

எல்லாம் போகட்டும்! ....

சிதம்பரம்... ஒரு அழகு கோயில் அது அநாகரிகமானது,.. அறிவீரா ? ..தில்லை வாழ் ****  செய்த தவறினை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாங்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்  தெரியுமா ?..

ராஜ ராஜனின் தமையன்  ஆதித்த கரிகாலன்,  காஞ்சியில் போர் படையில் துர் மரணம் நிகழ ( அல்லது பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட ) அதற்க்கு காரணம் தில்லை வாழ் ******** சிலர் என்று அறிய அத்துனை தில்லை வாழ் ****  ரும் நாடு கடத்தப்பட்டனர். இது இராஜ இராஜனின் மெய் கீர்த்தி சொல்லும் செய்தி. ( சூத்திரன் தவறு செய்தால் மரண தண்டனை / பிராமணன் தவறு செய்தால் நாடு கடத்துதுதல் தண்டனை).

அந்த நிமிடத்திலிருந்து சிதம்பரத்திற்கும் பொன்னம்பலத்திற்கும்  ராஜ ராஜனுக்குமான தொடர்பு மிக தூரமாகியது .,  சோழர்களும் அதன் பின்னால் தில்லைவாழ் *** அவ்ர்களால் முடிசூடப்படவில்லை.

நம்பியாண்டார் நம்பிகளுடன் தேவரத்திற்க்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில் நுழைந்த போது தில்லை வாழ் ********  உறவு முற்றிலும் சரிந்தது. (அருண்மொழித்தேவன் என்கிற ராஜ ராஜ சோழன் ., தேவராத்தினை கைப்பற்ற போராடிய போரட்டம் சொல்லி மாளாது! ,. அத்துனை சிரமங்களுக்கு அப்பாற்பட்டே அதனை மீடக முடிந்தது எனில் சிதம்பர சூழ்ச்சி எங்ஙனம் யோசியுங்கள்.!. (இதை சிவாஜி நடித்த "இராஜ இராஜ சோழன்"என்ற படத்தில் ஆவணமாகவே காணலாம்)

பின்னர் சோழ குலம் லேசாய் மங்கியதும் சிதம்பரமும் தில்லை வாழ் ****களும்  சேர்ந்து புதுமையான சோழர்களை கண்டது 15 ஆம் நூற்றாண்டில் தான் . ஆம். என்ன செய்ய காலம் அவர்களுக்கும் அவகாசம் தந்தே இருந்தது. (பூனைகளுக்கான காலம் என கொள்க). அந்த சோழர்களை அவர்களே உருவாக்கி அவர்களே பட்டம் சூட்டி அவர்களே நிலங்கள் நிவந்தங்களாக பெற்றதும் உண்டு. இவையாவும் 15 ஆம் நூற்றாண்டுக்கு பின்... முகலாயர்கள் தமிழ்கத்தினை துடைத்து விட்டு போனதற்க்கு பின்.

யார் தமிழகத்தினை ஆள்கிறார்கள் என தெரியாது இருந்த போது  ஒரு அரை நூற்றாண்டில் நடந்த கூத்து அது.

சரி நாம் ராஜ ராஜனுக்கு வருவோம்.

இது இப்படியிருக்க அருண்மொழத்தேவனின் (ராஜ ராஜன்) தந்தை, பாட்டன், கொஞ்சம் பார்க்க வேண்டியதும் முக்கியம் அல்லவா ?

அருண் மொழியின் முப்பாட்டன் விஜயாலய சோழன் பாண்டியப்  பெரும் போரில் பல்லவர்களுடன் இணைந்து  கண்ட வெற்றி மீண்டும் சோழ குலத்தினைத் துளிர்க்க செய்தது.!.

சரி அதற்க்கு முன் சோழம்  எவ்வாறு இருந்தது அறிவாரோ அவர்?

தாயாதி பங்காளிச் சண்டை உறையூருக்கும் பழையாறைக்கும் இடையே  நடந்தே வந்தது.

ஆம்.

உறையூரை ஆண்ட சோழர்கட்கும் ( கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் குலத்திற்கும் ) குடந்தை எனும் பழையாறை சோழர்களான சேம்பிய குடி சோழர்களுக்கும் படை நடத்தி அவர்களுக்குள்ளேயே அழித்துக் கொண்ட வரலாறும் உண்டு.

சரி… செம்பிய குடி எனில் மனு நீதி சோழன் வம்சம்.  அதுவாவது அறிவாரோ ?

இவர்கள் சண்டையில் கோலோச்சியதும் சோழத்தினை அடிமை படுத்தியதும் பல்லவர்களும் பாண்டியர்களுமே !!!

பங்காளிகள் சண்டையிட்டால்… யாருக்கு லாபம்?. ( பல்லவர்க்கும் /பாண்டியர்க்கும் தானே!? )

ஏனெனில் "சோழ நாடு சோறுடைத்து". சோழ நாடு அடிமை பட்டது எனில் அவர்களுக்கு சோற்றுப் பிரச்சினை இல்லை.

இதைத்தான் சரி செய்தார் ராஜ ராஜனின் தந்தை சுந்தர சோழர் எனும் பராந்தக சக்கரவர்த்தி!.

ஆம் தஞ்சையை தலை நகராக்கினார்..., அதுவரை சோழர்களின் தலை நகரம்.?

ஒன்று  : உறையூர்;,. மற்றோன்று : பழையாறை எனும் குடந்தை.!.

ஆக சோழர்களின் தலைநகரம் தஞ்சை ஆனது எட்டாம் நூற்றாண்டின் இறுதி என கொள்க.

இன்றும் திருச்சி சங்கிலிஆண்டபுரம் போன்ற  நிறைய பகுதிகள் சோழ பூர்வ குடிகளான கள்ளர்களே நிறைந்திருப்பதைக் காண முடியும். !, அவர்களோடு மண பந்தம் கொண்ட கொடும்பளூர் கூட்டமும் காண இயலும்.

சரி…  அப்படியானால் குடந்தை சோழர்கள் ?
திருவையாறு பகுதிகளில் பெண் கொண்டு புதுக்கோட்டை தொண்டைமான்களோடு உறவு கொண்டு ஸ்திரமாக வாழ்ந்தவர்கள் இவர்கள். இவர்களில் புற நானுற்றில் பாடப்பெறும் கோப்பெருஞ் சோழனும் ஒருவர். அவரை பாண்டியப் படை கொண்ட இடம் கோயில்வெண்ணி .  அவர் கூடவே வடக்கிருந்து உயிர் நீத்த அரும் புலவர் பிசிராந்தையார் ஆவார். புற நானூறு காட்டும் அழகு வரலாறு சொல்லும் இடம்,. அவர் போரிட்ட இடம் ,வாழ்ந்த இடம் ,அனைத்தும் கள்ளர்களுக்கு உரியவை.! இன்றைய அம்மாபேட்டை -வடுவூருக்கும் நீடாமங்கலத்திற்க்கும் இடைப்பட்ட ஊர் அது.!.

சரி… இதெல்லாம் இருக்க படையாட்சி என கூறப்படும் வன்னியர்கள் சோழனை சொந்தம் கொள்ளல் சரிதானா ?

சோழனையே சொந்தம் கொள்ள முடியாதவர்கள்,. ராஜராஜனை எங்கள் அருண் மொழித்தேவனை சொந்தம் கொள்ளல் தவறேதான் இல்லையா ?

தஞ்சையை சுற்றி உள்ள கள்ளர் நாடுகள் சிலவையாவன… ,

தஞ்சை – குடந்தை ,பட்டுகோட்டை ,மன்னை , கல்லணை வழித்தடங்களில் உள்ள சில ஊர்களின்  பெயர்கள் மட்டும் கொடுத்துள்ளேன்., அதுவும் பழைய நாட்டு பெயர்களுடன்..

1. காசா நாடு  -  தெக்கூர்                     கோயிலூர்.

2. கீழ்வேங்கை நாடு  -  உழுவூர்            பருதியப்பர் கோயில்.

3. கேனூர் நாடு -  தெக்கூர் கோட்டைத் தெருவு

4. பின்னையூர் நாடு -பின்னையூர்                   பின்னையூர்

5. தென்னம நாடு- தென்னம நாடு                           ......

6.  கன்னந்தங்குடி நாடு மேலையூர்                           ......

7. உரத்தநாடு புதுவூர்                                        கோயிலூர்

8. ஒக்கூர் நாடு மேலையூர்                             ......

9, கீழ் ஒக்கூர் கீழையூர்                                                   ......

10.  திருமங்கலக் கோட்டை நாடு  மேலையூர்             ......

11. தென்பத்து நாடு பேரையூர்              அப்பராம் பேட்டை

12. ராஜ வளநாடு நடுவாக்கோட்டை                            ......

13, பைங்கா நாடு பைங்கா நாடு                         ......

14. வடுகூர்நாடு தென்பாதி                          ......

15. கோயில்பத்து நாடு கம்பை நத்தம்  கோயில்பத்து

16, சுந்தர நாடு  வாளமரங் கோட்டை நாடு ......

17. குளநீள் வளநாடு துரையண்டார் கோட்டை தெற்குக்கோட்டை கடம்பர் கோயில் சங்கரனார் கோயில்

18. பாப்பா நாடு தெற்குக்கோட்டை                        சங்கரனார் கோயில்

19.   அம்பு நாடு: தெற்குத் தெரு வடக்குத் தெரு செங்குமேடு பன்னிரண்டான் விடுதி அம்பு கோயில்

20. வாகரை நாடு குருங்குளம்                              ......

21. வடமலை நாடு பகட்டுவான் பட்டி                               .....

22. கொற்கை நாடு செங்கிபட்டி கூனம்பட்டி             ......

23. ஏரிமங்கல நாடு ராயமுண்டான் பட்டி வெண்டையன் பட்டி

24. செங்கள நாடு விராலிப்பட்டி                        நொடியூர்

25,  மேலைத்துவாகுடி நாடு சூரியூர்                                 ....

26. மீசெங்கிளி நாடு ......                                 ......

27.  தண்டுகமுண்ட நாடு  ராயந்தூர் சித்தர்குடி               ......

28, அடைக்கலங்காத்த நாடு அள்ளூர்                                   ......

29. பிரம்பை நாடு                 பிரம்பூர்                                    ......

30. கண்டி வளநாடு நடுக்காவேரி                                   ......

31, வல்ல நாடு  இளங்காடு                                   ......

32. தந்தி நாடு நத்தமாங்குடி                                    ......

33. வாராப்பூர் நாடு பொன்னம் விடுதி                                    ......

34. ஆலங்குடி நாடு ஆலங்குடி                                    ......

35. வீரக்குடி நாடு வாண்டான் விடுதி                       திருமணஞ்சேரி

36. கானாடு திருவரங்குளம்                                   ......

37. கோ நாடு  ......                                                      ......

38.  பெருங்குளூர் நாடு பெருங்குளூர்                                    ......

39. கார்யோக நாடு     ......                                                      ......

40. ஊமத்த நாடு சிங்கவனம்                                    ......

எமது மக்கள் வாழும் பகுதிகள் கூட பெரும்பாலும் கோட்டை அல்லது நாடு என்றே அழைக்கப்படும்.

சோழ மன்னர்களால் நன்கொடை கொடுக்கப்பட்ட கிராமங்கள் மங்கலம் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டது எத்தனை பேர் அறிவீர்.?

வேறென்ன சொல்ல…

யாரையும் காயப்படுத்தாது சொல்ல வேண்டுமெனில் "இராஜ இராஜ சோழன் முக்குலத்து மன்னன்".

தொண்டை மண்டல அந்தண கூட்டத்தோடு வந்த "குடியேறிய குடி" அல்ல அவர்.!.

நாயக்க ஆட்சி காலத்தில் புதிதாய் பட்டம் பெற்ற கூட்டமும் அல்ல.,

அவர் எமது தொன்மை குடி.. !

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் எமது பட்டங்களையும் பழக்கங்களையும் விடாது பின் பற்றும் எமது குலம் அவர்.

தஞ்சையிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் காவிரியின் வலது பக்கம் முழுதும் முக்குலத்து கிராமங்களை இன்றும் காணலாம். (அதுவும் சதியோ விதியோ தெரியாது. இடது பக்கம் (வடக்கு பக்கம்) முழுதும் கிட்ட தட்ட  அந்தணர்களுக்கு அதிகமாய் வழங்கபட்டுவிட்டது கொடுமையே!.)

சாஸ்திரப் படி வடகிழக்கு  அந்தணர்களுக்கு வழங்கப்பட்டதோ... ஏனோ தெரியவில்லை????

அதலால் அங்கு குடியேறிவருக்கெல்லாம் / இந்த நூற்றாண்டில் இல்லை இல்லை முப்பது நாற்பது வருடங்களில் லேசாய் வளம் பெற்றவர் எல்லாம் எம் குல மகனை திருட முயற்சிக்கின்றனர்.

என் தாயை உன் தாய் என்று சொல். வழிமொழிகிறேன்.

என் தந்தையை உன் தந்தை எனில் நீயல்லவா வருத்தபடவேண்டும் என்பார் என் நண்பர். அவர் சொல்வதல்லவா நினைவுக்கு வருகிறது.

என்றேன்றும் அன்புடன்

பால.பாரதி!

No comments:

Post a Comment