Wednesday, March 22, 2017

வலங்கைப்புலி வெள்ளையத்தேவன்

"வலங்கைப்புலி வெள்ளையத்தேவன் "
+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+
      
             ஆங்கிலேயர்கள் மதராஸ் ரெகுலேஷன் 2 (1819) என ஓர் சட்டத்தை கொண்டு வந்தனர்! இச்சட்டத்தின் மூலமாக எவரையும் அரசியல் கைதி என அரெஸ்ட் செய்யலாம். பின்னர் நாடும் கடத்தலாம். இச்சட்டம் பாளையக்காரர் மேலும் பிரயோகிக்கப்பட்டது. அதை தீரமுடன் எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பியவர்தான் "சொக்கம்பட்டி" எனும் வடகரைப்பாளையக்கார் திரு. "வலங்கைப்புலி வெள்ளையத்தேவன்" அவர்கள்.

சொக்கம்பட்டி பாளையம்
--------------------------------------------
                    சொக்கம்பட்டி பாளையப்பட்டானது முன்பு 18 முக்கியமான கிராமங்களையும் அதில் பல குக்கிராமங்களையும் கொண்டு விளங்கியது. அவை
1.டி.என்.புதுக்குடி எனும் திருமலைநாயக்கன் புதுக்குடி.
2.திருவேட்டநல்லூர்
3.வீரிருப்பு
4.குலசேகரமங்கலம்
5.வெள்ளாளங்குளம்
6.ஈச்சந்தா
7.சொக்கம்பட்டி
8.வைரவன் குளம்
9.கம்பனேரி
10.புதுக்குடி
11. ஊர்மேனியழகியான்
12.குன்னக்குடி
13.வல்லம்
14.சில்லரைப்புலவு
15.சிவன் ஆதனூர்
16.மின்னடிச்சேரி
17.குலையநேரி
18.ஆனைக்குளம்
        என்பனவாகும். - இதனை வழி வழியாக கொண்டையன்கோட்டை மறக்குலத்தலைவர்கள் ஆண்டுவந்தனர். மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கீழ் சிற்றரசர்களாக முதலில் இவர்கள் இருந்தனர். பிற்காலப்பாண்டியன் அழகன்பெருமாள்குலசேகரத்தேவர் காலத்திற்கும்  (கி.பி.1430 ) வீரபாண்டியத்தேவர் (கி.பி.1475 ) காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் 'மும்முலாப்பட்டி, முருகப்பட்டி ' ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய பகுதிகளில் தென்காசி பாண்டியரின் சிற்றரசுபீடத்தின் எல்லைகளைக்காக்கும் காவல்தலைவர்களாக இருந்தனர். இதன் காலம் கிபி.1458 என்பர்.  இப்பாளையமானது பழைய ஏடுகளில் "தென்னேரி நாடு" என தொல்பொருள் சான்றுகள் சொல்கின்றன. இவர்களின் ஆட்சி எல்லை தென்காசி பகுதி முழுவதும் உள்ளடக்கியது.என்று 1755 ம்ஆண்டு "கன்ட்ரி கரஸ்பாண்டென்ஸ்" ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'சொக்கம்பட்டி ' என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இப் பாளையத்தின் தலைவர்களின் பூர்வீகம் மேற்சொன்ன மும்முல்லாப்பட்டி -முருகப்பட்டி என்ற ஊர்களேயாம்.

மரபினர் வழி!
-----------------------
         பாண்டியர்களுக்கெதிரான கலகத்தை அடக்கியதன் பொருட்டு பஞ்ச பாண்டியர் என அப்பகுதியில் அழைக்கப்பட்டு வந்த 5 சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு பரிசாக அருணாப்பட்டி, பெருமாள் பட்டி,ராமகிருஷ்ணாபட்டி, சொக்கம்பட்டி ஆகிய ஊர்களை மானியமாக அளித்தான். இவர்களின் வடகரைப்பாளையமே பிற்காலத்தில் சொக்கம்பட்டி பாளையமாகி இதன் தலைமையிடமானது.
அந்த ஐந்து சகோதரர்கள். ...
1.சின்னணஞ்சித்தேவன்
2.பெரியணஞ்சித்தேவன்
3.முத்தணைஞ்சித்தேவன்
4.பூவணைஞ்சித்தேவன்
5.நல்லணைஞ்சித்தேவன்
        இவர்கள் நிர்வாக வசதிக்காக தங்கள் பாளையத்தின் தலைநகரை சொக்கம்பட்டி க்கு மாற்றிக்கொண்டனர் .இந்த மாற்றம் 1767ஐ ஒட்டி நடந்ததாக கால்டுவெல் தமது திருநெல்வேலி சரித்திரத்தில் குறிப்பிடுகிறார்.
கலகக்கூட்டத்தை அடக்கி காவல் பணி ஏற்றது கி.பி.1391 என்றும் சொல்வார்கள். அப்போது பாண்டியர் தளபதியாக இருந்தவன் 'செம்புலி சின்னணைஞ்சித்தேவன் ' இவனது காலம் கிபி. 1391 -1434 வரையாகும். இவர்களின் வம்சாவழியினர் பட்டியல் கீழே.......
வடகரை ஆதிக்கம் / பாளையப்பட்டு
---------------------------------வம்சாவளி ! ------------------------------------------------------------- 
   1.செம்புலி சின்னணைஞ்சாத்தேவன் (1391-1434)
   2.முத்தணைஞ்சாத்தேவன்(தம்பி ) (1434 -1461 )
   3. காளத்தியப்பத்தேவன் (மகன் ) (1462 -1490 )
   4.அதிவீர ராமத்தேவன்  (மகன் ) (1490-1515 )
  5.வல்லராயத்தேவன்  (மகன் ) (1516 -1522 )
   6.திரிகூடராஜ கோபாலத்தேவன் (1536 -1595 )
       இவருடைய தாயாதி  (தாயாதி -பங்காளி ) பெரியணஞ்சாத்தேவர் இப்பாளையத்தின் தளகர்த்தர்களில் ஒருவராக இருந்தார். இக்காலகட்டத்தில் விஜயநகர அரசு பாண்டியர்களுக்கு மேல் கொலுவீற்றியிருந்தது. அப்போது சேரரும் ( திருவிதாங்கூர் படைகள் ) சோழரும் பாண்டியநாட்டின் மேல் படையெடுத்தனர். இப்போருக்கு இவரின் தலைமையிலான படைகள் மதுரைக்கு சென்றது. 8 ஆண்டுகளுக்கு போர் நடந்தது. போரில் அனைத்து படையினரும் மாண்டனர். இவர் மட்டும் வடகரைக்குத்திரும்பினார்.

    7.பெரியணைஞ்சாத்தேவன் குமாரமுத்து சின்னணைஞ்சாத்தேவர் (1602 -1629) (மகன் )
   8. சிவனடியாத்தேவன்  (1630 -1659) (மகன்)
    9. பெரியசாமியாத்தேவன்  (பெரிய பட்டம் ) (1670-1721 )
                              
(இவர் காலத்தில் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரும் தளவாய் ராமப்பையனும் குற்றாலம் கோயிலுக்கு விஜயம் செய்து பட்டங்கள் வழங்கி பரிசில்கள் வழங்கினர்.)
   
இவரின் தம்பி ராசகோபாலத்தேவன்  (சின்னப்பட்டம் ) இவருக்கு 7 குழந்தைகள் அவர்களில் மூத்தவரான வாரிசு. ...
10. திருமலைக்குமார சின்னணைஞ்சாத்தேவன் (1722 -1728 )
11. சிவராம சின்னணைஞ்சாத்தேவன்  (எழுவரில் இரண்டாமவர்-தம்பி)1729-1731.
12. மாப்பிள்ளை பெரியசாமியாத்தேவன்  (1731 -1741 )
இவர் 9வது பட்டம் பெற்றவரின் மகளான பூவாத்தாள் நாச்சியாரின் கணவர். இவர் இறந்த போது பூவாத்தாள் நாச்சியார் உடன்கட்டை ஏறித்தீக்குளித்து மாண்டார்.
13.காளத்தியப்பத்தேவன்  (1741 -1743 )
14.சின்னணைஞ்சாத்தேவன்  (1744 -1749)
(இவர் 9வது பட்டம் எய்திய போது இதில் 11வது பட்டமெய்திய சிவராம சின்னணைஞ்சாத்தேவரது மகனுக்கும் பட்டம் கட்டினார்கள் -இதனால் கலகமும் இரண்டு ஆதிக்கங்களும் ஒரே பாளையப்பட்டில் உருவாயின )
15. குமார சின்னணைஞ்சாத்தேவன் (1750 -1760 )
இதன்பின்னர் 1760 -1767 வரை கான்சாகிப் மற்றும் கர்நாடக நவாப் ஆட்சியின் கீழ் அவர்களின்ஏஜெண்ட்களின் கையில் பாளையம் வீழ்ந்தது. 1764 ல் குமாரசின்னணைஞ்சாத்தேவர் இறந்தார்.
16. செம்புலி சின்னணைஞ்சாத்தேவன்  (மகன் ) (1767 -1782 )
     மேற்குறித்த செம்புலியையும் அவரது வழியினை வேறு படுத்தும் வாயிலாக பிற்காலத்தில்  (3.11.1795ல்) வலங்கைப்புலி வெள்ளையத்தேவன் எனப்பட்டவர் வெள்ளையர் அரசுக்கு இந்தப் பாளையத்தின் வாரிசுதாமே என அறிவித்து,  அதற்குச்சான்றாக தம் மூதாதையர் குறித்த அறிக்கை ஒன்றையும் அளித்தார். அதற்கான வாரிசுரிமைப்பட்டியலையும் சமர்ப்பித்த அவர், மதுரைபாண்டியர் காலம் முதலே தங்கள் மூதாதையர் சொக்கம்பட்டியை
ஆண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சின்னணைஞ்சித்தேவன் முதலானோர் தமது மூதாதையர் வழியில் முறையின்றி வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். சொக்கம்பட்டி ஐ மைனர்கள் பொறுப்பில் இருந்த போது மேற்படியினர் பாளையத்தை கவர்ந்து கொண்டனரென்றும் தெரிவிக்கிறார்.

                  இந்த பரம்பரையில் வந்த வலங்கைப்புலிவெள்ளையத்தேவனே மதராஸ் ரெகுலேஷன் சட்டத்தை எதிர்த்தவர் ஆவார். .....

    இவரின் வம்சாவழியினர் பற்றியும் அறிந்து கொள்வது வரலாற்று அவசியமாகும்.
1. பாண்டியன் பகதூர் வெள்ளையத்தேவன்.
(இந்த நாட்களில் கர்நாடக நவாப்பிடம் தென்னகம் வீழ்கிறது. நவாப்பின் ஏஜெண்டான முஹம்மது இட்பர்கிகான் பாண்டியன் பஹதூர் வெள்ளையத்தேவனை நீக்கிவிட்டு செம்புலி சின்னணைஞ்சாத்தேவனை நியமிக்கிறான்.

2.பெரியசாமி செம்புலி சின்னணைஞ்சாத்தேவன் (1787-1790 )
3.குமார சின்னணைஞ்சாத்தேவன்  (மகன் ) 1790 -1796.
     இதனிடையே நெல்லைக்கு புதிய கலெக்டராக ஜார்ஜ் பௌனி வருகிறான்.இவன் வெள்ளையத்தேவருக்கு மீண்டும் ஜமீன் பொறுப்பை அளிக்கிறான்.
4. வலங்கைப்புலி வெள்ளையத்தேவன்  (முதல் ஜமீன்தார் மகன் )1796 -1835.
        இவரே தமது பாளையத்திற்கு தீர்வு கட்டமுடியாமல் தம் பாளையத்தை இழக்கிறார். அரசியல் கைதியாக பெல்லாரி குத்தி சிறையில்(1835-1837) அடைபட்டு பின்னர் விடுவிக்கப்பெறுகிறார்.
  இடையில் 1836-முதல்- 1858 வரையில்  ஆங்கிலேய காலனி ஆட்சி.

5.கருணாலய வலங்கைப்புலி்தேவன். (4-வது பட்டமெய்தியவரின் மகன் ) 1859-1863.

வடகரையா? சொக்கம்பட்டியா?
----'----------------'---''''-----'''----'''---''''---'''--
     வடகரையும் சொக்கம்பட்டியும் வேறு வேறு ஊர்களானாலும் வடகரை சொக்கம்பட்டியாரின் மிக முக்கியமான பாசறை ஆகும். சொக்கப்பட்டியாரை "வடகரையார் ஆதிக்கம்" என்றே வழக்கு மொழியில் சொல்வார்கள்.

             நாளை தொடருவோம்! ....

No comments:

Post a Comment