Wednesday, March 22, 2017

வடகரைப் பாளையக்காரர்களின் நற்பணிகள்!

நெல்லைச்சீமையில் புகழ்பெற்ற வடகரைப்பாளையம் என்ற சொக்கம்பட்டி ஜமீன்.

தென்காசிப்பாண்டியர்கள் திருநெல்வேலிப் பகுதியை ஆண்டு வந்தனர். தென்காசி பகுதியை சடையவர்மன்  பராக்கிரமபாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் ஆப்பநாடு கிழுவைநாட்டிலிருந்து வந்த மறவர்குல தலைவர்களுக்கு சில பகுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்த்தினார் .

வடகரையில் முதல்பட்டமாக வாழ்ந்தவர், செம்புலி சின்னணைஞ்சாத்தேவர் .இவர் கிபி 1391முதல்  1434 வரை ஆட்சி செய்தார்.
இவர் காலத்தில்தான் குற்றாலம் கோவில் அன்னசத்திரம்கட்டப்பட்டது.                                                
இரண்டாவது பட்டமாக வீரபாண்டிய ராஜா 1434 முதல் 1461வரை ஆட்சி செய்தார் .குற்றாலம் சிவன் கோயிலில் குழல்வாய்மொழி அம்மன் முன்பு தரையை சரிசெய்துமேம்படுத்தினார் .                                 
மூன்றாம் பட்டமாக காளத்தியப்பத்தேவர் 1462 முதல் 1490 வரை ஆட்சி செய்தார் .இவர் பண்பொழி முருகன் கோவிலுக்கு தேர் அம்மன் தேர் விநாயகர் முருகனுக்கு தேர் செய்ய பொன் பொருளை வழங்கியுள்ளார் .செங்கோட்டை வழியாக பண்பொழிக்குசெல்லபாலம்கட்டியுள்ளார் .                           
நான்காம் பட்டமாக அவர் மகன் அதிவீரராமத்தேவர் 1490 முதல் 1515 வரையில் ஆட்சி செய்து வடகரை ஈஸ்வரன் கோவிலுக்கும் கன்னிமூலைக்கோட்டைக்கும் திருப்பணி செய்தார் .                             

ஐந்தாவதாக வல்லவராயத்தேவர் 1516 முதல் 1522வரைஆட்சிசெய்தார் .                                                   
ஆறாவது பட்டமாக 1536 முதல் 1595 குலசேகர ராஜா ஆண்டு வந்தார். குற்றாலம் சிவன் கோவிலின் குறைவேலைகளை கட்டி முடித்தார் .கண்டிக்கோட்டையையும் சொக்கம்பட்டி கோட்டையையும் கட்டி முடித்தார் .

இவருக்கு வாரிசு இல்லாததால் வடகரை மூலக்கோட்டையை சேர்ந்த குமார முத்து சின்னணைஞ்சாத்தேவர் ஏழாவது பட்டமாக ஆட்சிக்கு வந்தார் இவர் காலத்தில் குற்றாலநாதர் தீர்த்த மண்டபம் சுற்றுப்பிரகாரம்கட்டப்பட்டது.                                                       
எட்டாவது சிவனடியார் தேவர் ஆட்சி செய்திருக்கின்றனர்.

ஒன்பதாவதாக பெரிய பட்டம் பெரியசாமித்தேவர். சின்னப்பட்டம் சிவராம சின்னணைஞ்சாத்தேவர் காலத்தில்தான் திருக்குற்றாலம் சித்திர சபைக்கு செப்பேடு பதித்து கும்பாபிஷேகம் செய்தார். மேலும் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியிலுள்ள யானைப்பாலம் திருநெல்வேலி பாதையிலுள்ள இரும்புத்தண்டு பாலங்களை கட்டியதும் சொக்கம்பட்டி ஜமீன்தான் .    

திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய புலவர் திரிகூடராசப்பக்கவிராயர் இந்த ஜமீன் புலவராக இருந்துள்ளார் .               

"ஆலயஞ் சூழ்த் திருப்பணியுங்கட்டி
அன்ன சத்திரங்கட்டியப்பாலுந் -தென்காசிப் பாலமுங்கட்டிப் படித்தரஞ் சேர்கட்டிப் பக்தசனங்களைக் காக்க துசங்கட்டி மாலயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டு செய்திடக்கச்சை கட்டிக்கொண்ட சீலன் கிழுவையிற் சின்னணைஞ் சேர்ந்தான் சிறுகால சந்தித் திருத்துப்புறவெல்லாம் " 
-என்ற அவர் பாடலில் பாடியுள்ளார் . 

சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .
இதே போல ஒரு புலி அட்டகாசம் செய்து வந்ததைகண்ட ஜமீன் சின்னணைஞ்சி சிவத்தபாண்டியன் புலியை அடித்து கொன்றார் .அதை புலவர் இவ்வாறாக பாடுகிறார் .                       

"தம்புலியான மடப்புலியே !                        தடிக்கம்பால் அடிபட்டாயே !                        எங்கள் முப்புலி துரைப்புலி வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலியால் கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே "

என்று புகழ்ந்து பாடியுள்ளார் .                            

சுதந்திர போராட்டத்தில் சொக்கம்பட்டி பாளையத்திற்கு சிறப்பான இடமுண்டு .1729 ல் ஆட்சி செய்த சின்னணைஞ்சி செவத்த பாண்டியன், 156 கிராமங்களை ஆட்சி செய்தார் இவர் வெள்ளையரை எதிர்த்து நெல்கட்டாஞ்செவல் பாளையக்காரர் பூலித்தேவருடன் இணைந்து போரிட்டார் .பூலித்தேவர் பாளையத்தை போலவே சொக்கம்பட்டி பாளையமும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டது .1801ம் ஆண்டு மருதுபாண்டியர்களின் தென்னிந்திய கிளர்ச்சியிலும் பங்கு கொண்டு சுதந்திரப்போருக்கு தியாகம் செய்தனர்

ஜமீனின் கடைசி வாரிசான கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி நோய்வாய்பட்டு குற்றாலம் பங்களாவில் இறந்தார் .......

....நன்றி! .. "இசக்கி முத்து"

No comments:

Post a Comment