வேரை மறந்த மரங்களின் கதை:1
-^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^-
இது வரலாற்றில் தமது பட்டங்களாலும், பிரிவாலும், தனித்தன்மையாலும், உண்மை முகத்தை தொலைத்த இனங்களின் வரலாறாகும். இதை முகநூலில் தொடராக எழுத எண்ணியுள்ளேன். ஒவ்வொரு இனமாக அலசுவோம். இதன் மூலம் தமிழக சாதிகள் தமது பழைய வரலாற்றை மீட்டெடுக்க மற்றும் அவர்களது உண்மை உறவுச்சாதியினரை அடையாளங்காணும் முயற்சியே அன்றி வேறெந்த காழ்ப்புணர்வும், பிரித்தாளும் கொள்கையோ அல்ல என்பதை முகநூல் வாசகர்கள் உணர்க.
சவளைக்காரர்:
- - - - - - - - - - - - - -
பரதவரில் ஒரு பிரிவான சவளைக்காரர் என்போர். இன்று பெருவாரியாக தம்மை சிறிதும் தொடர்பற்ற பள்ளி-வன்னியர் இனக்குழுவில் தொடர்புற்றவர்களாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களின் சான்றுகள் பரவர் அல்லது பரதவர் எனும் மிகவும் பண்டைய தொல்குடி இனமாகிய திணைக்குடிகளின் வழியினராக சொல்கிறது. பரவரான இச் சாதியாருள் "வன்னியர்" என்பதும் ஒரு பட்டமாகும். இதை பிற்காலத்தில் "வன்னியர்" எனும் சாதிச்சான்றிதழ் பெற்ற ஒரு செயற்கையான குழுமத்தினர் சொல்லும் கதைகளை ஏற்றுக்கொண்ட 'அறிவுசாரா' சமூக மக்களின் அறியாமையால் தம்மை வன்னியன் என்றும், வன்னியகுல சத்திரியர் என்றும் எண்ணிக்கொண்டு தமது தாய்ச்சமூகமான பரதவரை விட்டு விலகிநிற்க ஆளாகின்றனர். கீழுள்ள சான்றுகள் எட்கர்தர்ஸ்டன் குறிப்புகளாகும்.
பரவர்-பரதவர் வெவ்வேறு அல்ல என்பதும் சவலைக்காரர் மற்றும் சலங்குகாரர் இருவரும் ஒத்த கூறுடையவர்கள் என்பதும் பரவரில் சவலைக்காரர் ஒரு வகையார் என்பதும் தெளிவு. எக்காலத்திலும் பள்ளி என்போர் பரவரிலோ, பரதவரிலோ,சவலைக்காரரிலோ வரவில்லை என்பதும் வன்னியர் என்றபெயர் பரவரான சவலைக்காரருக்கும் உண்டு என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெற்றென விளங்கும். இவர்கள் இன்று பா.ம.க. போன்ற கட்சிகளில் வன்னியர் எனும் பொதுப்பெயரால் இணைந்து தம் வேர்ச்சமூகத்தை அறியாமல் 'அக்னிகலச' குறியீட்டையும், அக்கட்சியின் கொடி வண்ணத்தை தமது சமூகத்தின் நிறமாகவும் எண்ணி வீணே மயங்குகின்றனர். மேலும் அறியாத சவளைக்காரர் பலரையும் படையாச்சி எனும் மற்றொரு பட்டங்கொண்டு நீவிர் பரதவரல்ல! , பரவரல்ல! , இன்னும் சவளைக்காரரே கூட அல்ல! , நீர் -வன்னியர், படையாச்சி என பட்டப்பெயரை சாதிப்பெயராக்கி சாதிக்கின்றனர்.
ஆகவே வேரை மறக்கும் மரங்கள் நாளடைவில் பட்டுப்போன வெறுங்கட்டைகளாகும். என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இதையறிந்தாவது இனி வேரை நோக்கிய உங்கள் கவனத்தை திருப்பி அதை நீர்விட்டு பராமரிக்க வேண்டிய கடமை சவளைக்காரர் இனத்தவர்கள் செய்யவேண்டிய பணியாகும்.
நாளை மற்றொரு வேரிழந்த மரத்தைப்பார்ப்போம்! -தொடரும்!
அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்
'""""""""""""""""
No comments:
Post a Comment