Sunday, April 16, 2017

பாண்டியன் மறவனா? அல்லது மற்றவனா?

பாண்டியன் மறவனா? அல்லது மற்றவனா?-2.
☪☆☪☆☪☆☪☆☪☆☪☆☪☆☪☆☪☆☪☆☪☆☪

அன்பு நண்பர்களே! ... பாண்டியர் பற்றிய பல்வேறு தரவுகளும் அவர்களை மறவர் என்றே கூறுகின்றன. ஆயினும் பல சமூகத்தவர்கள்  தங்களது ஆய்வாளர்களை(??) வைத்து எழுதிய கதைகளையும், கட்டுரைகளையும், நூல்களையும் ஆதாரமாகக்கொண்டு தத்தம் சமூகத்தவன் பாண்டியன் என நிறுவ முயற்சிக்கின்றனர்.  பாண்டியர் மறவர் என்று இன்றல்ல, வேள்விக்குடி செப்பேட்டை வாசித்து படியெடுத்த அறிஞர்கள் அனைவருக்கும் அன்றே தெரியும்.  இன்று மீண்டும் அதை மீளாய்வு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறேன்.  ஏனெனில் அதில் வரும் "மற்றவர்" என்ற வாக்கியம் மிகவும் அர்த்தமற்ற, முட்டாள்தனமான அர்த்தங்களை தருகிறது. 

இந்த வேள்விக்குடி செப்பேடு மட்டுமல்ல. .. பாண்டியர் பற்றிய செய்திகளைச் சொல்லும் பெரும்பாலான கல்வெட்டுகள் அனைத்துமே மீளாய்வுக்குறியனவதாம். எடுத்துக்காட்டாக கீழே வரும் தளவாய்புர செப்பேட்டில் ஒரு வாக்கியத்தை வாசியுங்கள், ...

" மற்றவர்க்கு 'மகனாகிய'
    கொற்றவனெங் கோவரகுணன்".

  என்ன அர்த்தம் என்பதை உங்களின் பார்வைக்கே விடுகிறேன்.  நான் காணும் அர்த்தம் இதுதான். 

"எவனுக்கோ மகனாகிய கொற்றவன் எங்கள்  கோ வரகுணன் "

              என்ன இது கேவலமாக இருக்கிறதே? என நினைக்கிறீர்கள் அல்லவா? இப்படித்தான் படியெடுக்கிறேன் பேர்வழி என்று  பொருளைச்சிதைத்தும் குறிப்பிட்ட சமூகம் பெயர் பெற்றுவிடக்கூடாது என்றும் கூட்டுச்சதியைச் செய்துள்ளனர்.  அந்தோ பரிதாபம்! .. அந்த செப்பேட்டு வாக்கியம் இதுதான். ..,

" மறவர்க்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன் "
         
                                    -இப்போது படியுங்கள் பொருள் சரியாக வருவதை உணர்வீர்கள், 

கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் புள்ளி முறை இல்லாத அக்காலத்திய நடைமுறையை இக்காலத்து புள்ளி வைத்து "ற்" என வாசிக்கும் போது மிகவும் கவனமாக சரியாக வாக்கியம் அமைந்துள்ளதா? அவ்வாறு முழுமையடைந்த வாக்கியம் சரியான பொருளைத் தருகிறதா?  அல்லது தவறான பொருளைத் தருகிறதா?  என்று கூட உணராமல், எல்லா வாக்கியங்களுக்கும் சரியான பொருளைத் தந்துவிட்டு "மறவர்" என்று வந்ததை மட்டும் "மற்றவர்" என மாற்றிவிட்டால் பின்னாளில் வரும் தலைமுறை ஆய்வாளர்கள் , வரலாற்றாளர்கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்களா என்ன?...  இந்த செப்பேடு ஒன்றோடு விட்டுவிட்டார்களா?  அதுவும் இல்லை! கீழே ஒரு கல்வெட்டு ஒன்றை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். , அதையும் வாசியுங்கள். . எல்லாம் புரியும். ,

இது பராந்தக நெடுஞ்சடையன் எனும் பாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டு  {கி.பி:773} கல்வெட்டாகும்.

" ஸ்ரீகோமாறஞ் சடையற்கு
  ராஜ்ய வருஷம் ஆறாவது செல்லா
நிற்ப "மற்றவர்க்கு"மஹா
சாமந்தனாகிய கரவந்த புராதி
வாசி வைத்யன் பாண்டி அமிர்
தமங்கல வரையனாஇ
ன சாத்தங்கணபதி தி
ருத்துவித்தது திருக்கோ இ
லும் ஸ்ரீதடாகமும் இதனுள
றமுள்ளதும் "மற்றவர்க்கு"
தர்மபத்னி ஆகிய
நக்கங் கொற்றி யாற் செயப்
பட்டது துர்க்கா தேவி கோ
இலும் ஜேஷ்டை கோஇலும்."

இக்கல்வெட்டின் படி பெறப்படும் செய்தியாவது,  மாறன்சடையன் என்னும் பராந்தக நெடுஞ்சடையனாகிய வரகுணபாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டில், இம்மன்னனின் படைத்தலைவன் சாத்தன்கணபதி என்பவன் திருப்பரங்குன்றம் குடைவரையைத் திருத்தி அமைத்தான். இவன் நெல்லை மாவட்டம் கரவந்தபுரம் என்ற ஊரைச்சேர்ந்தவன். இக்கரவந்தபுரமே இன்றைய உக்கிரன்கோட்டையாகும். இன்று லக்ஷ்மி தீர்த்தம் என வழங்கப்படும் குளத்தையும் இவனே அமைத்தான். அவனது மனைவியான நக்கன் கொற்றி என்பவள் இம்மலையிலேயே துர்க்காதேவி கோயிலும், ஜேஷ்டை கோயிலும் குடைவித்தாள்.  என செய்தி தெரிகிறது.  சரி!.. இனி விஷயத்திற்கு வருவோம். ,

இக்கல்வெட்டில் .....

" மற்றவர்க்கு மஹா சாமந்தனாகிய "

எனும் வாக்கியம் உணர்த்துவது என்ன?

மற்ற எவருக்கோ சாமந்தன் என்று பொருள் கொள்ளலாமா?  இங்கே இவன் பாண்டிய மன்னனாகிய வரகுணன் கீழிருந்த சாமந்தன்  {படைத்தலைவன் அல்லது குறுநிலமன்னன்}
என தெளிவாக வரலாறு உணர்த்திய பிறகு,  பின் எவ்வாறு இவன்  மற்றவனுக்கு மஹாசாமந்தனாகுவான்?  இது இகழ்ச்சியாக இல்லையா?

" 'மறவர்க்கு' மஹா சாமந்தனாகிய
  கரவந்த புராதி வாசி வைத்யன் ".....

                -இப்போது படியுங்கள் பொருளுடன் வாக்கியம் சரியான முறையில் உள்ளதல்லவா? 

இதாவது பரவாயில்லை! ... அதேகல்வெட்டில் இதற்கு கீழேயே வரும் பின்வரும் வாக்கியமானது மிகவும் கேவலமான பொருளைத் தருகிறது. ..அது!.....

"'மற்றவர்க்கு' தர்மபத்னி ஆகிய நக்கங் கொற்றியாற் செயப்பட்டது"

       -அடப்பாவிகளே!. ..😄 .  "மற்றவர்க்கு தர்மபத்னி" என்றால் என்ன அர்த்தம்?   ஊரில் உள்ள அனைவருக்கும் தர்மபத்தினியா?   கொடுமைதான்.  ஒருவேளை படியெடுத்தவர் "தர்மபத்னி " என்பதை தருமமாக கொடுக்கப்பட்ட பத்தினி என்று நினைத்து அனைவருக்கும் வாரிவழங்கிவிட்டாரோ என்ன  கருமமோ?

"மறவர்க்கு தர்மபத்னி ஆகிய நக்கங் கொற்றியாற் செயப்பட்டது "

      - என்பதே இங்கு சரியான வாக்கியமாகும். 

இவை மட்டுமல்ல இன்னும் பல தவறுகளையும் பலரும் செய்துள்ளனர். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல! , இந்த "மற்றவர்க்கு " எனும் வாக்கியம் அமைந்த 'கல்வெட்டு படிகளை' பல்வேறு சிறந்த ஆய்வாளர்கள் குழுமத்தில் நான் கேட்டு விவாதித்ததில் அது தவறென்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். ஆக இது போன்ற கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மீண்டும் மீளாய்வுக்குறியது என்பதுடன் காழ்ப்புணர்ச்சி இன்றி வரலாற்றை உள்ளது உள்ளபடியே வாசிக்கும் காலம் விரைவில் வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

                -அன்புடன்,

     கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

Thursday, April 13, 2017

சேந்தன்குடி வழுவாட்டித்தேவர் வரலாறு!

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்
(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு)
பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் காலத்தில் மறந்திரா வண்ணம் அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி போன்ற பகுதிகளில் தமிழ் வளர்த்து பேராண்மையுடன் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களான வழுவாட்டி தேவர்களின் சரித்தரத்தை பார்ப்போம். இந்நூல் அந்த வழுவாத தேவர்கள் சரித்திரத்தை அவர்களின் சந்ததியினர் வெளியிட்ட நூலின் மூலத்துடன் அவர்களின் ஒப்புதலாலும் ஊக்குவித்தலால் இக்கட்டுரையை சமர்பிக்கிரோம்.
தாணான்மை நாடும் வழுவாத தேவர்களும்:
தாணான்மை என்ற சொல்லிலே எவருக்கும் அடிபணியா "தாளான்மை" என்ற சிறப்புடன் தன்னகத்தே கொண்ட தன்னரசு நாடு என்பது விளங்கும். எனவே இச்சிற்றரசர்கள் சுயகவுரத்திற்கும் வீரத்திற்கும் பேர் போன வீர மக்களாகும். அதனாலே தங்கள் நாட்டுக்கு தாணான்மை நாடு என பெயர் வைத்துள்ளனர்.இதற்க்கு குலமங்கலம்,கீரமங்கலம்,நகரம்,சேந்தன்குடி இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தாணான்மை நாட்டுக்கு "சேந்தங்குடி" தலைநகரமாகும். இன்று அது சிற்றூராகினும் முன்னாளில் அது சிறப்புர விளங்கியுள்ளது. இதனாலே நகரம் என்னும் சிற்றூரும் அருகே உள்ளது.
வழுவாடி தேவர்கள்:
இந்த சிற்றரசர்களின் பட்டம் வழுவாட்டி தேவர்கள். வழுவாடி என்னும் பெயர் பாண்டிய மண்ணன் வழுதி என்னும் பெயருடனும் மற்றும் வீரத்தை குறிக்கும் பெயராக இருப்பினும். இவர்களின் முழுப்பட்டமான "வணங்காமுடி வழுவாட்டி தேவர்" என்னும் பெயரிலே அதற்க்கு விளக்கம் உள்ளது. அதாவது "வணங்காத முடி புணைந்து தன் தரித்த முடியை எக்காலகட்டத்திலும் வழுவாத பண்பை கொண்டவர்கள்". எனவே நீதி,செங்கோல் இவைகள் தன்னை விட்டு வழுவாமல் ஆட்சிபுரிந்தவர்கள் ஆதலில் இவர்கள் "வணங்காமுடி வழுவாத தேவர்கள்" என்ற பெயரே காலபோக்கில் "வணங்காமுடி வழுவாட்டி தேவர்கள்" என்ற பெயரானது.அத்தகை வீர மைந்தர்களின் பூர்வ வரலாறை பார்ப்போமாக.
பூர்வீகம்:
இவர்களின் வரலாறு சில ஒலை சுவடிகள் மூலமாகவும் செவி வழிகதைகளினாலும் மேலும் 1951-ல் புள்ளான்விடுதி மதுரகவி நடேசகோனார் அவர்கள் எழுதிய "விஜயாந்தகளிப்பு" என்ற நூலையும், சேந்தங்குடி செந்தமிழ் புலவர் து.அ.சுப்புராம் அவர்களால் எழுதப்பெற்று 1983-இல் வெளிவந்த "சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற நூலையும் இன்னும் சிலரின் வரலாற்று  குறிப்புகளையும் ஆய்வு செய்து இன்நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர்கள் பாண்டிய நாட்டை பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் மதுரைப்பக்கத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்
"ஆதியில் வீரத்தேவன்,ஆவாத்தேவன்,
ஆண்டித்தேவன்,கூத்தா தேவன், என்ற நான்கு
சகோதரர்கள் மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்
குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன்
சூரைக்குடி" யிலும் கோனாப்பட்டுக்கு சமீபமாய்
உள்ள குருந்தம்பாரையிலும்
வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக
இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்"
என்று அரண்மனை வழுவாட்டி வாசகத்திலிருந்து
படித்து இருக்கிரேன், ஆவாத்தேவன் வழி வந்தோர் என் மூதாதையர்"
என்றும் எழுதியுள்ளார்" -- புலவர் :தா.ச. இராமசாமி.
அந்த நால்வரும் ,குருந்தன்பாறையில் தங்கி இருந்த போது அங்கிருந்து இடம்பெயர்ந்த காரணத்திற்கு பல சமூகத்திலும் புழங்கும் "மகட்கொடை மறுப்பு கதையை" கூறுகின்றனர். "மகட்கொடை மறுப்பு கதை" ஒரு பகுதியிலிருந்து இன்னோரு பகுதிக்கு செல்லும் மக்கள் நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்தோம் என கூறுவது மரியாதை தராது என்பதற்காக "மன்னன் பெண் கேட்டு அதை ம்றுத்து" வந்தோம் என கூறுவது அவர்கள் கவுரவத்தை  உயர்வாக எண்ண தோன்றும் ஆதலில் அந்த வழக்கத்தை தொன்று தொட்டு பல்வேறு சமூகமும் கூறும் காரண கதையாகும்.
இப்படி வந்தவர்கள் தங்கிய இடம் "அரசர்குளம்" .அங்கு அரன்மனையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வீர வரலாற்றை கேட்ட அரசர்குளம் அரசன். அவர்களுக்கு அடைக்கலம் தந்து அரண்மனையில் பாதுகாவலராக பணியில் அமர்த்தினான்.
இப்படி வந்த வீரத்தேவன் என்பவரும் அவரின் மனைவியும் கர்ப்பவதியான பொன்ன்மாள் அரசர்குளத்தில் தங்கி ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள் அக்குழந்தைக்கு "விஜயன்" என பெயர் வைத்தனர். உரிய  பிராயத்தில் விஜயன் வளர்ந்து கல்வி,போர் பயிற்ச்சிகளில் சிறந்தவனாக வளர்ந்து அவ்வரண்மனையில் படைதளபதியானான்.
செவி வழி கதையை ஆராய்ந்து நிஜவரலாறை சிந்திப்போம்:
மேலே சொன்னது செவி வழிக்கதையாய் இருப்பினும் அதில் சில உண்மைகளும் இருக்கிறது. இதில் சொன்ன "அரசர்குளம்" என்பது இன்றைய பாலையவநத்தம் ஜமீன். அதன் அரசன் வணங்காமுடி பண்டாற தொண்டைமான். அதைபோல் சேந்தங்குடி ஜமீன் மூதாதையர்கள் பாண்டிய நாடு சிவகிரி,வடமலை பகுதிகளில் இருந்த பாண்டிய நாட்டு மறவர் குலத்தோர்கள். இவர்கள் பாண்டிய சேனையில் தளபதிகளாகவும் சிற்றரசர்களாகவும் திகழ்ந்துள்ளனர். பிற்கால பாண்டிய பேரரசர்களின் ஆட்சி டில்லி சுல்தாண்களால் சிதைந்த பின் குருந்தன்பிறை சூரைக்குடியிலிருந்து கிளம்பி சென்றுள்ளனர். சூரைக்குடி பகுதியை ஆண்டவன் விஜயாலயதேவன் என்பது அதைப்போல் சேந்தங்குடி ஜமீந்தார்களின் பெயர்கள் விஜயதேவர்கள் என்பது ஒற்றுமை ஆய்வுக்குரியது. இதைப்போல் சூரைக்குடி அரசர்களுக்கு தொண்டைமான் என பெயர் இருப்பது போல அறந்தாங்கி தொண்டைமான் அவர்களின் வழித்தோன்றல்கள் பிற்காலத்தில் பாலவநத்தம் பகுதிக்கு குடியேறியதாக நம்ப படுகிறது. பாலவனத்தம் ஜமீனும் சேந்தங்குடி ஜமீனும் சம்பந்திமார்கள். இருவருக்கும் இடையில் 500 வருடமாக திருமண சம்பந்தங்கள் உள்ளது. என்வே அறந்தாங்கி தொண்டைமானும் சூரைக்குடி விஜ்யாலயத்தேவன் சந்நிதியும் பாலவனத்தம்,சேந்தங்குடி அரசர்களின் மூதாதயர்களாக கருதலாம்.







எனவே அரசர்குளம் என்பது பாலவநத்தம் ஜமீன். அரசன் ஒருமுறை வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது அரசன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கெட்ட எண்ணங்கலைக் கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டு விரட்டினார்கள்.
"
"ஆங்கரசர் வேட்டைக்கு போன பின்னர்
அம்புக்கோவில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர் குல மழ்வராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன்
நதீங்காக மாதர்கள் மானபங்கம்
செய்ததனால்....
அவன் பெயர் வீராச்சாமி மழவராயன்
அவன் மறுத்து கொடுமை கூறி
கூளிபோல் பொங்கியவன் சிறைபிடிப்பேன் குலமாதர்
தம்மை கொதித்தான் மன்னோ"
அரசர்க்குளம் அரசர் வீட்டில் இல்லை என்றாலும் பட்டுக்கோட்டை பட்டு மழவராயன் வீராச்சாமி அரசர்குளம் அரண்மனை அரசியையும் மற்றவர்கலையும் சிறைப் பிடிக்க முயன்றபோது விசயனும் இளவரசனும் பட்டு மழவராயன் படை மீது பாய்ந்து போர் தொடுத்தார்கள்

"வாள் விசயன் மெய்மறந்தான் சிறைபிடிப்பேன்
மாதர்கள் தம்மை யென்ர வார்த்தையாலே
தலை விசயம் கொண்டான் விஜயத்தேவன்
நண்ணார் மேல் பாய்ந்திடான் புலியே போல்
கேட்ட கேட்ட மக்களெல்லாம் ஓடிவந்தார்
கிடைத்தாரை சாடினர் மறவர் மக்கள்
ஓட்ட ஓட்டமாய் ஓடும் மழ்வராயர் உயிர்பிழைக்க!"
-அ.சுப்புராம செல்வமுத்துதுரைத்தேவர்

மாவீரன் விஜயத்தேவனை  பற்றி புள்ளான் விடுதி நடேசகோனார் அவர்கள் 1951 எழுதிவெளிவந்த சேந்தங்குடி ஜெமீன் விஜயானந்தக்களிப்பு நூலில் விஜயன் பட்டுக்கோட்டை பட்டு மழவராயனுடன் போரிட்ட வரலாறை விமர்சியாக பாடியுள்ளார்.
"அன்பே பைந்தங்கமே விஜயா -ஆர்க்கும்
அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள் வெற்றி விஜயா"
"வாகொத்த பனங்குளம் கிராமம் மறவர் வந்து
குடியான குளமங்கலம் கிராமம்
கொற்றமங்கலம் கிராமம்
கீரமங்கலம் க்ராமம்
நகரம் சேந்தங்குடி கிராமம்
மாட்சிமை துலங்க வர ஆட்சி செய்யுமாறு
மகுடம் சூட்டி அரசர் ஜமீன் தர"
அரசர்குளம் ஆட்சிபகுதிகளில் அமைந்திருந்த அம்புலி ஆற்றிருக்கும் வில்லுனி ஆற்றுக்கும் இடைப்பட்ட சேந்தங்குடி,குளமங்கலம்,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,நகரம், பகுதிகலை உள்ளடக்கிய சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486(கொல்லம் ஆண்டு 661) மாவீரன் விஜயத்தேவனை சேந்தங்குடி பாலையக்காரணக முடி சூட்டினார்கள். அதுமுதல் பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளார்கள்.
சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆட்சி தொடரும்போது அறந்தாங்கி தொண்டைமாண்கள் ஆண்டுவந்துள்ளனர். அம்புகோவில் பட்டுகோட்டை பகுதியில் பட்டு மழ்வராயர்கள் என்ற கள்ளர் குலத்தவர்கள் ஆண்டு வந்துள்ளனர். எனவே சிதம்பரம்,சீர்காழி சென்ற் ஆவாத்தேவன் கூத்தாடித்தேவன் குத்தாலம் சென்ற சிரம்பிராண்டி இவர்கள் அனைவரும் சேந்தங்குடி திரும்பி வந்தனர். இவர்கள் விஜயனின் சிற்றப்பன்மார்கள்.
மேற்கண்ட மூவரும் முதலில் குளமங்கலம் வந்து தங்கி இருந்தபோது இவர்கள் மறவர் இனத்து  தேவர் மரபினர்களாக இருந்ததால் இப்பகுதியில் கள்ளர்கள் குலபெண் எடுப்பதற்காக மாவீரன் விஜயத்தேவன் பெண் தேடி ஆலங்காடு சூரன்விடுதி,கீழாத்தூர்,தொண்டைமான் குலப்பெண்களை திருமணம் செய்து வைத்தார்கள்.
"திரை புகழும் விஜயன் வழுவாட்டித் தேவன் சிற்றப்பா மூவர் ஆவர் மேவிய ஆவாத்தேவன்"....
"முறையே ஆலங்காட்டு முத்து தொண்டைமான் அருந்தவப் புதல்வி மீனம்பாளையும் கீழாத்தூர் அருனாசல்த் தொண்டைமான் கொழுந்தான புதல்வி குலக்கொடி சூரன்விடுதி அருணாசலத் தொண்டைமான் புதல்வி பார்வதியும் திருமனம் செய்து வைத்தனர்".

பாளையக்காரன் மாவீரன் விஜயத்தேவன் மறவர் இனத்தேவனுக்கு பனங்குளம் பட்டுக்கோட்டை
 பூச்சு நாயக்கர் குல பெண்ணையும் இந்திர குள கள்ளர் மழவராயர் பெண்னையும் திருமனம் செய்து வைத்தார்கள்.
மாவீரன் விஜய்த்தேவன் மேற்கண்ட பனங்குளம் பெண்களைத் திருமனம் செய்து கொண்டு நாயக்கர் குலப்பெண் வேலரசுத்தேவன் என்ர மகனையும், மழவராயர் மகள் ரெகுநாதன் என்ற மகனையும் பெற்றனர். இதில் விஜ்யத் தேவன் 1526-ம் ஆண்டு இயற்கை எய்தினான். இதில் ரெகுநாத தேவன் சேந்தங்குடி பாளயக்காரனாக மூடிசூட்டப்ப பட்டாண்.
விஜய் ரெகுநாத தேவன் கி.பி.1526 ல் சேந்தங்குடி பாளையக்காரணானார். விஜய நகர பேரரசின் கீழ் தமிழ்நாடு இனைந்து இருந்த் விஜயநகர நாயக்கர் அரசின் மேலாண்மையை ஏற்று சேந்தங்குடியை ஆண்டு வந்தனர்.
சேந்தங்குடி ஜமீன் கி.பி.1553ல் ஆறுமுகத்தேவன் ஆட்சிக்கு வந்தார்
இவரின் பங்காளிகள் அவர்கள் முறையே
1.மொத்தி வீட்டார்
2.தோப்பு  வீட்டார்
3.செம்பன் வீட்டார்
4.பொட்டிரான் கொல்லையார்
5.உப்புக்கார வீட்டார்
6.காங்கேயன் வீட்டார்
இவர்கள் நகரம்,குளமங்கலம்,வலப்பிரமங்காடு,சித்துகாடு பகுதியில் வாழ்கிறார்கள்.
கி.பி.1553-86ல் முருகப்பதேவர் ஆட்சிக்கு வந்தார் இக்காலத்தில் மதுரை பகுதியில் குருந்தம்பாறையில் இருந்து 3-குடும்பங்கள் வந்தன இவர்களோடு பல தொழிலாளிகளையும் தச்சர்கள்,வண்ணார்கள் முதலிய பலரையும் அழைத்து வந்தனர்,

இவர்கள் வகையில் சின்னுத்தேவன் மக்களாகிய சவுக்குபுஞ்சை வகையிரா,ஏழுவீட்டார் வகையறா,நம்பன் புஞ்சை என்ற பிரிவுகளில் வாழ்ந்து வந்தனர்,

இக்காலக்கட்டத்தில் சேந்தங்குடி பாளையத்தில் கீரமங்கலம் சிவன் கோவில்,பனங்குளம் பெருமாள் கோவில் தேர் திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளதாக ஜமீன் தலைமையில் நடந்தது என தெரிகின்றது.
கி.பி.1586 இல் முள்ளிபுஞ்சை மன்னகுட்டி வாரிசுகளாக சேந்தங்குடியில் பட்டமெய்தினர்.
சேதுபதி மன்னர்களும் சேந்தகுடி பாளையக்காரர்கள் பற்றிய குறிப்புகள்:
இராமநாதபுரம் சேதுபதி மன்னன்,சேந்தங்குடி பாளையக்காரனிடம் வரி வசூலிக்க முகமதிய தூதுவனை சந்தங்குடிக்கு அனுப்பினான்.ஆண்டு தோறும் ஐந்நூறு  பொன் திறை என்றே வேண்டி யாங்கு செலுத்திவர மேலிரண்டு வருடங்கள் பூண்ட கப்பம் செலுத்தாமல் போகச் சேது மன்னன் தூண்டுத் தூதுவன் ஏவிச் செல்லும் கப்பம் கொணர்கள் என்றார்கள்.
வந்த தூதுவன் பலாப்பலம் சாப்பிட ஆசைப்பட்டான்
பலாப்பலம் சாப்பிட்ட தூதுவன் மீசையில் பிசிர் ஒட்டிக் கொண்டது . அதற்க்கு சாம்பலை தேய்த்தால் அது நீங்கிவிடும் என கூறி சாம்பலை தடவ பிசிர் போகாத நிலையில் வேறு வழியில்லாமல் தூதுவனின் மீசையும் கிருதாவையும் வெட்டி அனுப்பினர். ஊரே கேலி செய்தது தூதுவன் நிலை கண்டு. தன் தூதுவன் அடைந்த அவமானம் கண்டு சேதுபதி படையெடுத்து வந்து சேந்தங்குடி பாளையக் கிராமங்களை தீயிட்டு கொழுத்தினர்.
இதன் பின் சேதுவின் படைகளை முறியடிக்க சேந்தங்குடி மறவர் படைகளை தயார் செய்து விஜயத்தேவர் போரிட்டார். இதன் பின் சேதுபதியும் வழுவாடியும் சமாதனம் பேசப்பட்டு இருவரும் நன்பராணார்கள்
"தோழர் பலரும் தொடர்ந்து பின் வர
ஆழி சூழ் சேதுவின் அணிநரரெய்திக்
கோபதி விஜய ரகுனாத சேதுபதி புகுந்து
வணங்கி..
..மன்னவன் வழுவாட்டிக்கு அவரின் வீரத்தை பாராட்டினார், இது போக சேதுபதி மன்னரிடம் பேய்குதிரையும் அடக்கி ஆத்திக்கோட்டை ஆயிரம் வேலியும் முன்பாலை கிராமத்தையும் பெற்றார் வழுவாடித்தேவர்.
இராமநாதபுரம் சேதுபதி வழுவாட்டி தேவருக்கு சிற்ப்பான ஒரு விருதாக "வனங்காமுடி  வழுவாட்டி தேவர்" என்ற பட்டத்தையும் வழங்கினார். நாயக்கர் ஆட்சிக்குபின் சேதுமன்னர்கள் ஆட்சிக்கு கீழ்  சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.1625ல் மன்னன் வழுவாட்டியும் மெய்காவலன் மங்கங்காலடியும் பட்டுக்கோட்டை அருகே சூரியபுரம்,அலிவலம் பகுதியில் வெட்டி கொன்றனர். ப்ன்னாளில் அக்கோவில் முன் இருவரும் உருவச்சிலை அமைத்து வீரவணக்கம் நடைபெற்று வருகிறது.
தஞ்சை நாயக்கர் ஆட்சிக்கு பின் இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்குக்கு கீழ் 
1.சேந்தங்குடி
2.பாளையவனம்
3.சிங்கவனம்
4.புனல்வாசல்
5.நெடுவாசல்
6.பாதரங்கோட்டை
7.கல்லாகோட்டை
8.கந்தர்வகோட்டை
9.சில்லத்தூர்
10.கோனூர்
11.மதுக்கூர்
12.அத்திவெட்டி
13.பாப்பாநாடு
 போன்ற பாளையபட்டுகள் இருந்து வந்தது.
இதில்கோனூர்,அத்திவெட்டி,அஞ்சுகொத்து மறவர்கள். சேந்தங்குடி வனங்காமுடி கோப்பி குல மறவர்கள்,நேம நாட்டுமறவர்கள்,அணில் ஏறாக்கோட்டை மறவர் அதலை மறவர் என இப்பிரிவுகள் எதிலாவது வரலாம்.
மொத்தத்தில் மறவரே எனினும்  இன்னும் உட்பிரிவு கண்டறியப்படவில்லை.
1676ல் இராமநாதபுரம் கிழவன் சேதுபதி மன்னர் கறம்பக்குடி,பிலாவிடுதி பச்சைதொண்டைமான் தன் படைத்தலைவனாக்கி ஆண்டுவந்தான். இவன் சகோதரி காத்தாயியை சேதுபதி திருமனம் செய்து கொண்டு புதுக்கோட்டை பல்லவராயனை கொன்று அவனது பகுதிகளுக்கு பச்சை தொண்டைமானை இரகுநாதராய தொண்டைமானை என பெயர்  சூட்டி புதுக்கோட்டைக்கு அரசனாக்கினார்.
பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் ஆளுகைக்கு வந்தது சேந்தங்குடி வந்தது. அப்போது ஒரு சிறு புலிக்குட்டியை குடுத்து பரிசளித்தார். இதனால் தஞ்சை மன்னர்களால் பாராட்டப்பட்டார்.
சேந்தங்குடி வழுவாடித்தேவர்கள் பாண்டியர் வழித்தோன்றல்?
சேந்தங்குடி பாளைய்க்காரர்களின் குல தெய்வம் பெருங்கரைமிண்ட அய்யனார் கோவில் கல்தூன்களில் மீன் சின்னங்கள் மதுரையை ஆண்ட பாண்டியர்களை நினைவுபடுத்துகின்றது.மேலும் "சேந்தன்" என்னும் பெயர் மதுரை பாண்டியர்களில் கானப்படுகின்றது. வழுவாடித்தேவர் என்னும் எப்யர் கூட வழுதி என்னும் பாண்டியரின் பெயரை குறிக்கின்றது. மேலும் சேந்தங்குடி ஜமிந்தார்கள் மதுரை பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதில் இவர்கள் பாண்டியர்களின் ஒரு பிரிவினராக கருதலாம்.
ஒருமுறை மராட்டிய மன்னர் அழைப்பை ஏற்று தஞ்சை அரண்மனை மேல் மாடியில்  மன்னருடன் பேசிகொண்டிருந்தார் அப்போது ஒரு நாரை தலைக்குமேல் பறந்தது. அப்போது  பறந்த நாரையை வில்லம்பால் வீழ்த்தினார் வழுவாடியார் இதனால் வியந்த மராட்டியமன்னர் அதம்பை,காயாவூரி கிராமங்களை வழங்கினார்.
கி.பி.1728ல் ரகுநாத வழுவாடித்தேவர் பட்டத்துக்கு வந்தார்.
இவரின் வழி வந்தவர்கள் ஆறுபிரிவினர்கள்
1.மொத்திவீட்டார்
2.முள்ளிபுஞ்சையார்
3.வடக்குவீட்டார்
4.முண்டன் கரை
5.தெற்குவாடியார்
6.நாட்டாம் புஞ்சையர்.என கூறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்  நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்,தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்களுக்கு வரையறை செய்து ஆனையிட்டுள்ளார்.  தஞ்சை மாவட்டத்தில் இருந்த சேந்தங்குடி பாளையக்காரர்கள் மற்றும் 12 பாளையக்காரர்கள்,ஜெமீந்தார்களுக்கு இந்த ஆனையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விபரம்,தஞ்சை.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரத்தில்
சேந்தங்குடி பாளையக்காரர்கள்,கள்ளர் மரபினர்கள் என்று எழுதியுள்ளார்.
ஆனால் சேந்தங்குடி பாளையக்காரர்களின் முன்னோர் மதுரைப்பகுதியில் இருந்து வந்த மறவர்கள். மறவர் இனத்தின் பொதுவாண தேவர் பட்டம் கொண்ட மறவர்கள். இவர்களில் சேந்தங்குடி முதல் பாளையக்காரன்,மாவீரன் விஜயத்தேவன்(கி.பி.1486) இவரைப்பற்றி புள்ளான்விடுதி நடேசகோணார் 1951ல் எழுதி வெளிவந்த "விஜயானந்த களிப்பு"என்னும் நூலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர். சேந்தங்குடி பாளையக்காரர்களின் வழிதோன்றிய அனைவரும் மறவர் இனத்து தேவர் குல மக்களே.
கள்ளர் பெண்களை அதிகமாக மணந்த சேந்தங்குடி ஜமிந்தார்கள்:
சேந்தங்குடி ஜெமீன் வழி வந்தவர்கள் கள்ளர் இனப்பெண்களையே ஆதியில் ஆலங்காடு,சூரண்விடுதி,கீழாத்தூர் பனங்குளம் மழவராயன் பெண்களை எடுத்து வந்துள்ளார்கள்.பிண்ணாளில் சேதுபதி சேர்வைக்காரர் வழி வந்த மாப்பிள்ளை துரை பெண்களை மனந்தார்.
"தானான்மை நாட்டில் வெகு பெண்களிருக்க
நத்தமாலே பழநி சென்றார் இரண்டு
நாரியரும் வன்னியர்குமாரிகளே கொண்டார்
வித்தாரமாச் சிலது நாளே துரைகள்
விந்தையோடு வாழ்ந்தார்"
- நடேசக்கோணார்
பழனி சென்று வன்னிய குல கள்ளர் மரபினரான பழநி கருப்பண்ண தேவரின் இருமகள்களாகிய முத்துலெட்சுமி ஆயியாரை 13-வது ஜமிந்தாருக்கும் அவர் தம்பி ராசுத்துரை தங்கம்மாள் ஆயியாரையும் திருமணம் செய்து கொண்டணர்.
பிண்ணாளில் பாலையவனம் ஜெமிந்தார் விஜயரகுநாத வணங்காமுடி பண்டாரத்தார் இரு புதல்விகளாகிய சின்ன ராசாமணி ஆயியார்,பெரிய ராமசாமி ஆயியார் இருவரையும் திருமணம் செய்து கொண்டார்கள் ஜமீன் தம்பி ராசுத்துரைத்தேவர்.
சேந்தங்குடி மன்னர்களின் ஜாதி பற்றிய முரணான செய்திகள்:
சேந்தங்குடி ஜமீன் பற்றி முதல் தவரான் குறிப்பை புதுக்கோட்டை மேனுவலில் வெங்கட் ராம அய்யர்
வெளியிட்ட குறிப்பில் புதுக்கோட்டை திவான் ஸ்ரீனிவாச அய்யர் தந்த குறிப்பில் நகரம் ஜமிந்தார்கள் வலையர் வகுப்பார் என தவராக எழுதியுள்ளார் தஞ்சை மாவட்டத்தில் இருந்த அன்றைய சேந்தங்குடிஜமீன் பற்றி தெரியாமல் ஏதோ மராட்டிய மன்னர் சரபோஜி தந்த நிலத்தில் மன்னரானார் வழுவாடி என
தவராக எழுதியுள்ளார். இது ஒரு குறிப்புகளில் முற்றிலும் அரைவேக்காடான செவி வழிசெய்தியை பதிவு செய்துள்ளனர்.
நாயக்கர் காலத்துக்கு முன்னே அறந்தாங்கி தொண்டைமான் காலத்தே ஏற்பட்ட ஜமீன் சேந்தங்குடி.
இதன் பின் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனையில் அது தஞ்சை பகுதி 
கள்ளர் ஜமீன் என குறிக்கபடுகின்றது. அதுவும் அறியா தகவலே.
கள்ளர் சரித்திரம் எழுதிய வேங்கடசாமி நாட்டாரும் சேந்தங்குடி ஜமீன் என குறித்துள்ளார்.
சேந்தங்குடி ஜமீன் பெரும்பாலும் பெண் எடுப்பது பாலையவனம் கள்ளர் ஜமீனில் தான். ஒரு வலையர் சமூகம் அதுவும் கள்ளர் ஜமீனில் பெண் எடுப்பது இயலாத காரியம். மேலும் வழுவாடித்தேவர் பங்காளிகள்,
சம்பந்தகாரர்கள் மழவராயர்,கச்சிராயர்,தொண்டைமான்,பல்லவராயர்,வாயாடியர் என அனைவரும் கள்ளர் என சான்றிதழ்கள் வைத்துள்ளனர். அவர்கள் கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடியிலும் அதிகமாக உள்ளனர்.
மேலும் வழுவாடித்தேவர்கள் சிலருக்கும் கள்ளர் என சான்றிதழ்கள் உள்ளன.
மேலும் தஞ்சை சீமையிலே உள்ள அத்திவெட்டி,கோனூர் போன்ற அஞ்சுகொத்து மறவர்கள் என பலரும் அறிந்ததே அவர்களுடனும் வழுவாடித்தேவர் சம்பந்தமுள்ளது.
1949-இல் குமாரசாமி வழுவாடியார் தம் பத்திரத்தில் தனக்கு கடைசியாக இருந்த சேர்வை என்ற பட்டத்தை
வைத்து அவர் அறியாமல் "அகமுடையார்" என சான்றிதழ் வாங்கியுள்ளார். வழுவாடி சேர்வைக்கார்
இரண்டு பத்திரங்களிலும் "அகமுடையார்" என்றே பதியபட்டுள்ளது.
இது பிற்பாடு "அகமுடையார்" என்ற சாதி சான்றிதலை எம்.பி.சி சலுகைக்காக தங்களுக்கு இருந்த அம்பலம்,சேர்வை என்ற பட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த"அம்பலக்காரர்" என மாற்றியுள்ளனர்.
இதுவே சேந்தங்குடி ஜமீந்தாரை  முத்திரையர் சமூகம் என கருத காரணமானது. இது சான்றிதல் குறைபாடுதான் ஒழிய வேறு சம்பந்தமில்லை.
ஆனால் அவர்கள் சம்பந்தம் பூராம் கள்ள்ருடனே தான் ஒழிய முத்திரையர் சமூகத்துடன் அல்ல.
தஞ்சை கள்ளர் சீமையிலே தேவர் பட்டம் பெற்றவர்கள் வழுவாடித்தேவர்களே எனவே தாங்கள் மறவர் இனத்தவர்தான் என பூரணமாக அறிந்திருந்தனர்.
எனவே கடந்த 60 வருடகாலத்துக்கு மேலாக தங்களை மறவர் இனம் மறவர் ஜாதி என கிட்டதட்ட 10 புத்தகங்களுக்கு மேலாக எழுதியுள்ளனர்.
தங்களை அம்பலக்காரர் சமூகம் என காட்டபட்டாலும் தங்களுக்குள்ளே சம்பந்தம் செய்து கொண்டு முத்திரையர் மக்களுக்கும் ஆதரவாக இருந்து தொண்டாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் தென்பகுதிமக்களே. இந்த கட்டுரையை கண்மூடி தனமாக மட்டும் எழுதவில்லை கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் ஜமீன்கள் மறவர் சமூகத்தவர் என்பதும் அஞ்சுகொத்து திருவாடனை மறவர்கள். அவர்கள் உறவினர்களான செந்தங்குடி மற்றும்  பாலையவன்ம் ஜமிந்தாரின் சம்பந்திகள் எந்த சமூகமாக இருக்க முடியும்.சேந்தங்குடி மறவர் ஜமீனே என்பது தின்னம்.
இவர்கள் வணங்காமுடி கோப்பிகுல மறவர் அல்லது வன்னிய மறவராகவோ அல்லது அனிலேறாக்கோட்டை மறவராகவோ இருக்க கூடும்.  இது சேந்தங்குடி பாளையக்காரர்களே தங்களே மறவர் சமூகம் என ஆனித்தரமாக எழுதிய பல புத்தகங்களையும் அதற்க்கு ஆதரமாக காட்டிய நூல்களும் சான்று.
மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரில்,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்
"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னே வந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.
அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்
"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா"
என சேந்தங்குடி ஜமீனின் தோற்றத்தை கூறுகிறது.
இத்னை யாருடை கவுரவத்திற்கு குறைவாது என கணிவோடு கூறுகிறோம்.
சேந்தங்குடி பதினான்காவது அரசி ஸ்ரீ ராணி மாது தங்கம்மாள் ஆயியார் கி.பி.1925-1943
சிவகங்கை எப்படி ஒரு வேலுநாச்சியார் ஆண்டாரோ அதே போல் ராமநாதபுரத்தை ஆண்ட் முத்து திருவாயிநாச்சியார் ஆண்டாரோ அதே போல் சேந்தங்குடி ஜமீனை தங்கம்மாள் ஆயியார் என்னும் வீர நாச்சியார் ஆண்டுவந்தார். இவர் காலத்தில் நாட்டாங்கொல்லை ரகுபதி வழுவாடியார் ஜெமீன் மனியக்காரராகவும் இருந்து பின் ஜமிந்தார் தங்கம்மாள் ஆயியார் சிறிய தந்தை பெரியசாமி வன்னியனார் சேந்தங்குடி மனியக்காரராக மாறினார். தங்கம்மாள் ஆயியார் தந்தை பெயர் பெரியசாமி வன்னியனார்.
வழுவாடித்தேவர்கள் மதுரை பகுதியிலிருந்து வந்தவர்கள். மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கை,திருநெல்வேலி பகுதியில் கள்ளர்,மறவர்,அகம்படியார் வீடுகளில் இறந்தால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ஆண்கள் மேனியில் துண்டு,சட்டை அனியாமல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு துக்கம் அனுசரிப்பது வழக்கம் அதுபோலே இன்றும் வ்ழுவாடித்தேவர்கள் அனுசரித்து வந்திருக்கிறார்கள்.
சேந்தங்குடி 15-வது ஜமீந்தார் சேதுபதி சேர்வைக்காரர்:
சேந்தங்குடி ஜமிந்தார்களுக்கு சேதுபதி என்னும் பெயர் கொண்ட வழுவாடித்தேவர்களும் உள்ளனர்.
சேதுபதிகளின் உறவினர்களும் வழுவாடித்தேவர்களுடன் சம்பந்தம் செய்துள்ளனர்.
சேந்தங்குடி பாளையக்கார்களின் நகரம் பாலசுப்பிரமணியர் கோவில்
சேந்தங்குடி ஜமிந்தார்கள் பழநி முருகன். ஆண்டுதோறும் ஊர்கூடி காவடிகளும் மாலை அணிந்து பழநி செல்வது வழக்கம். பழனி முருகண் கோவில் போல் செயற்கை குன்று அமைத்து ஒரு முருகன் கோவில் கட்டவேண்டும் என்ற ஆவல் கொண்ட் வழுவாடித் தேவர் 1878-79ல் புதுக்கோட்டை திவான் சேசுவா சாஸ்திரி உதவியுடன் நகரம் முருகன் கோவிலை அமைத்தார்.
இந்த கோவிலுக்கு சேதுபதி மன்னர்,தஞ்சை சரபோஜி மன்னர்களும் நிலக்கொடை வழங்கியுள்ளனர்.
மிக பிரசித்தி பெற்ற கோவில் இது.
மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரி,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்
"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னேவந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.
அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்
"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா
பாருக்கு சீரிட்ட  மறவர் கால பாசமே வந்தாலும் பயம்ற்ற மறவர்
போருக்கே பேர்பெற்ற மறவர் உடலை
போட்டாலும் போரில் வென்காட்டாத மறவர்
வீரமேயுருவான மறவர் அமரில் வீராதி வீரரை வீழ்த்கிற மறவர்
ஆருமே நிகரற்ற மறவர் ஆர்க்கும் அஞ்சாத வேந்தரையும்
கெஞ்சாத மறவர்"
-புள்ளான் விடுதி நடேசக்கோனார்("விஜயன் களிப்பு")
மேற்கண்ட கவிதை நூலின் வாயிலாகவும்,மதுரைபகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் மறவர் இனத்து தேவர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெளிவாக்கபட்டுள்ளது.
சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஏறக்குறைய பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சியில் அவர்கள்கட்டிய சேந்தங்குடி கருப்பண்ண சுவாமி கற்கோவில் முகப்பில் மீன் சின்னம் காணப்படுகின்றது. அவர்கள் கட்டிய நகரம்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் முகப்பில் மீன் சின்னம் காண்ப்படுகிறது. அதன் அருகில் உள்ள இடும்பர் கோவில் முகப்பின் மீன் சின்னம் காணப்படுகின்றது இவைகலைக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் மதுரைபகுதியில் இருந்து வந்த பாண்டிய மன்னர்களின் ஒரு பிரிவினர் என உறுதியாகின்றது.
சேந்தங்குடி பாளையக்காரர்கள் கி.பி 1486 முதல் கி.பி1948 ஆண்டுகள் ஆட்சியில் தொண்டைமான்,விஜயநர மன்னர்,தஞ்சை மராட்டியர்,இராமநாதபுரம் சேதுபதி இறுதியில்
ஆங்கிலேயர் மன்னர்கள் போன்ற பலர் ஆளுகையில் இருந்தாலும் தன்னரசு ஆட்சி நடத்தினர்.
இவர்களிடம் அவ்வப்போது ஆட்சி மாற்றங்கள் வாரிசு உரிமைப்போர்கள் நடைபெற்றுள்ளன.
பெண்களும் வாரிசு உரிமை போர்கள் ஏற்பட்ட போது ஆட்சிக்கட்டில் ஏறி உள்ளனர்.
அவ்வகையில் சேந்தங்குடி ஜெமிந்தார் ராணி தங்கம்மாள் ஆயியார் வாரிசு தன் மகனுக்காக பசுமகரானியாக இருந்து மகன் இறப்புக்கு பின் இப்பகுதியில் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர். சேந்தங்குடி ராணி தங்கம்மாள்  வாரிசு இல்லாமல் 21-03-1943ல் இறந்து போனார். அதனால் ஏற்பட்ட வாரிசு உரிமைப்போர்களில் நீதி மன்றங்கள் ஏறியுள்ளனர்.
இந்தியா விடுதலை பெற்ற சூழலிலும் ஜெமின் வாரிசு உரிமைபோர் நடைபெற்று அதற்க்கு தீர்வு காண இங்கிலாந்து பிரிகௌன்சில் மற்றும் இந்திய உச்ச் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கண்டுள்ளார்கள்.
சேந்தங்குடி ஜமீன் பரம்பரையினர் நகரம்,கீரமங்கலம்,குளமங்கலம்,கொத்தமங்கலம் கோயில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள்.

சேந்தங்குடி ஜெமீன் பரம்பரையினர் இப்பகுதியில் தமிழகம் பூராவும் பரவி பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் மேலும்,முதல் பாளையக்காரர் வழி வந்த சிறிய தந்தை ஆவாத்தேவன் வழிவந்த குளமங்கலம் கோப்பியர் முதுகாடு குழு செல்லையா பழைய சட்டமண்ற உறுப்பினர் மற்றும் கீரமங்கலம் சு.சண்முகனாதன்  பழைய சட்டமண்ற உறுப்பினரும் மறவர் இனத்து தேவர்களே.
மேலும் அரசியல் பலம் பெற்ற இம்மக்கள் 1952-2013 வரை புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதி பேராவூரனி தொகுதி சட்டமண்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர்.
இதுபோக பேராவூரனி ஒன்றியம்,திருவரங்குளம் ஒன்றியம்,அறந்தாங்கி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் என்னற்ற ஊராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வந்துள்ளனர்..
மேற்கோள் நூல்கள்:
14-05-1891 நகரம் பாலசுப்பிரமனி கோவில் குடமுழுக்கு விழா இதழ்
1863 கிராம மக்கள் நிலங்கள் தானம்
சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனை
கள்ளர் சரித்திரம் நமு.வெங்கடசாமி நாட்டார் 1928
சேந்தங்குடி கிரயசாசன்ம் 1943
சேந்தங்குடி ஜமீன் விடுதலை பத்திரம் 27-7-1944
புள்ளான் விடுதி நடேசக்கோனார்
தஞ்சை மாவட்ட நீதி மன்ற தீர்ப்புகள் 1947,50,56...
விஜயானந்த களிப்பு உறை செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
"தாணான்மை நாட்டு வரலாறு"-செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
1993- "தானான்மை தங்கம்மாள்"
சேந்தங்குடி ஜமீன் வழுவாடியார் தீக்கதீர்,தனமலர்,மற்றும் இதழ்கள்.
"பாலசுப்பிரமனிய கோவில் ஆண்டு இதழ்"
என ஆவணங்கள் பல.

-
நன்றிகள்:
"தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு"
இந்த கட்டுரைக்கு ஆதரவான நூல் எழுதிய
நூல் ஆசிரியர்:
சே.சி கந்தசாமி தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு)
(அ) கந்தசாமி வழுவாடித்தேவர்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
தானான்மை நாட்டு முக்குலத்தோர் பேரவை தலைவர்
சேந்தன்குடி
அன்பு சகோதரர் தமிழியக்கன் சேர்வை

Saturday, April 8, 2017

குலம் ஒரு ஆய்வு!

குலம்: ஒரு  ஆய்வு!
♢"♢"♢"♢"♢"♢"♢"♢"♢"♢
குலம் என்பது பல்வேறு வர்ணங்களின் ஒருங்கிணைப்பாக இருக்கலாம். பல்வேறு ஜாதிகளின் ஒருங்கிணைப்பாகவும் இருக்கலாம்.

இந்தச் சாதிகளின் ஒருங்கிணைப்பான குலம் ஒரே வர்ணத்திடமும் இருக்கலாம். அதாவது, பல்வேறு பட்ட ஜாதிகளைச் சேர்ந்த ஆனால் க்ஷத்திரிய வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், க்ஷத்திரிய குலத்தார்.

அதே போல, வேறுபட்ட வர்ணத்தவர்கள் ஒரு குல தெய்வத்தை வணங்குபவர்களாக ஒருங்கிணைந்தால், அவர்களும் ஒரு குலத்தவர்தான்.

அதாவது, குலம் என்றால் வேறுபட்ட ஜாதிகளோ, வேறுபட்ட வர்ணங்களோ ஒரு ஒற்றைக் குழுவாக ஒருங்கிணையும் சமூக அமைப்பு. ஒரு குலம் என்பது ஒரே வர்ணத்தைச் சேர்ந்த பல ஜாதிகளின் கூட்டு அமைப்பாகவோ, பல வர்ணத்தினரின் கூட்டமைப்பாகவோ இருக்கலாம். இவை சமூக கூட்டமைப்புகள்.

இங்கனம் சமூகக் கூட்டமைப்பு மட்டுமின்றி வேறு ஒரு விஷயத்தை வைத்து ஒரு குழுவாக அடையாளம் காணப்படுபவர்களையும் ஒரு குலத்தாராகவே நமது இலக்கியங்கள் அழைக்கின்றன. உதாரணமாக,  ஒத்த குணம் கொண்ட பலதரப்பட்ட மனிதர்களின் கூட்டமைப்பையோ, ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் கூட்டமைப்பையோ குலம் எனும் சொல் குறிக்கலாம்.

இங்கனம் பல பொருள் தரும் ஒரு சொல்லாக குலம் எனும் வார்த்தை இருப்பதால், நம் இலக்கியங்களில் எந்த வகையான கூட்டமைப்பை குலம் எனும் வார்த்தை குறிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக, இந்த திருவாய்மொழி பாடலைப் பாருங்கள்:

"குலம் தாங்கு சாதிகள்" நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள்
என்று உள்கலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகளே.

திருவாய்மொழியின் இந்தப் பாடலின் முதல் அடி, தெளிவாகவே குலம்/சாதி சமன்பாட்டை விளக்கி விடுகிறதே. ஒரு குலம் என்பது நான்கு வர்ணத்தாரையும் கொண்டது என்கிறது இப்பாடல்.

இந்தப் பெரிய புராணப் பாடலைப் பாருங்கள்:

வாரணச் சேவலோடும் “வரிமயிற் குலங்கள்” விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை

இங்கே, மயில் எனும் உயிரினங்கள் ஒன்று திரண்ட கூட்டமைப்பு எனும் பொருளைச் சுட்டுகிறது குலம்.

மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் “குலப் புகழ்ச் சோழனார்” தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு
பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள்

இங்கே, சோழ நாட்டில் தன்னுடைய குலத்தின் பெருமையை நிலைநாட்டிய சோழ அரசன் பாராட்டப்படுகிறான்.

“வள்ளல் குல” பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவதருமம்
உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில்
எள்ளல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து
வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அ•கியது நாடு எல்லாம்

இப்பாடலில், வள்ளல் குணம் கொண்டவர்களை ஒரு குழுவாகக் கருதி, அக்குழுவை குலம் என்று அழைக்கிறார்கள்.

அதே போல கீழே உள்ள பாடல்களிலும் குலம் என்பது வெவ்வேறு குழுக்களை குறிப்பதைக் காணலாம்.

“கானவர் குலம்” விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது//

கம்ப ராமாயணத்திலும் குலம் பற்றிப் பேச்சு வருகிறது:

‘விலங்கினர் உயிர் கெட விலக்கி, மீள்கலாது,
இலங்கையின் இனிது இருந்து, இன்பம் துய்த்துமேல்,-
“குலம் கெழு காவல“- குரங்கின் தங்குமோ?
உலங்கும் நம்மேல் வரின், ஒழிக்கற்பாலதோ?
          =×=
கூவி இன்று என்னை, நீ போய், “தன் குலம்” முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்குப் பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து
எதிர்ந்து, தன்கண் ஆவியை விடுக!” என்றான், அருள் இனம்
விடுகிலாதான்.
            =×=
அள்ளி மீது உலகை வீசும் “அரிக் குலச்” சேனை நாப்பண்,
தெள்ளு தண் திரையிற்று ஆகி, பிறிது ஒரு திறனும்  சாரா
வெள்ளி வெண் கடலுள் மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்ட.
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை;
            
அதாவது, குலம் எனும் வார்த்தை விரிந்து பலவற்றையும் உள்ளடக்கும் சொல்.

அதாவது குலம் எனும் அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது என்பதை அந்த வார்த்தையோடு சேர்ந்து வரும் மற்ற வார்த்தைகளால் தெளிவாக அறியலாம்.

குலம் என்பது பல்வேறு ஜாதியினரை, பல்வேறு மதத்தினரை, பல்வேறு மொழியினரை, பல்வேறு வர்க்கத்தினரை அவர்களுக்கு இடையே இருக்கும் ஒரு ஒற்றுமையின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் ஒரு அற்புதமான சமூக அமைப்பு.

எனவே, குலம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும்தான் குறிக்கிறது என்கிற பொருளை கொள்வது தவறு. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூச்சலிடுகிற பலருக்கு இவ்வித்தியாசம் தெரியாததால், ஜாதியை ஒழிப்பது போல குலத்தையும் ஒழிக்க வேண்டும் என்கின்றனர். திருக்குறளில் குலம் எனும் சொல் ஜாதியை குறிப்பதால், திருக்குறள் ஒரு சாதீய நூல் என்கின்றனர். வேறு சிலரோ தங்களின் ஜாதீய பெருமை பேச திருக்குறளை விதந்து ஓதுகின்றனர். அந்தோ பரிதாபம் !

இது தெய்வத் தமிழ்  இலக்கியங்களுக்கு மட்டுமல்லாது, அறிஞர்களின் மொழியான செம்மொழியிலும் வருகிறது. அவற்றை வாசிப்பவரும் இங்கனம் தவறாகப் பொருள் கொண்டு விடுகிறார்கள். உதாரணமாக, பகவத் கீதையில் வரும் “அபிஜனவான்” எனும் வார்த்தை.

आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥१६- १५॥

adhyosbijanavanasmi kosnyos sti sadruso maya |
yakshye dasyami modishye ityajnanavimohitah ||(16 – 15)||

இங்கே “அபிஜனவான்” என்பதை விளக்க நம் ஆதி ஷங்கரரும், ஸ்ரீ ராமானுஜரும் குலம் என்கிற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர். இங்கேயும் “குலம்” என்பதை ஜாதி என்று தவறாகப் பொருள் கொண்டு, தன் ஜாதியின் உயர்ந்த குணத்தை மதிப்பவன் அரக்க குணம்  கொண்டவன் என்று தவறாகப் பொருள் கொண்டு விடுகிறார்கள் சிலர். இவர்களுக்கு ஸாஸ்திரங்களில் தேர்ச்சி இல்லாததுதான் இத்தவறான புரிதலுக்குக் காரணம்.

அதிலும், ஜாதி அழிய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் இந்த தவறான பொருளை வைத்து ஜாதியை ஒழிக்க வாதிடுகிறார்கள். பகவத் கீதை ஜாதி ஒழிப்பை முன்வைக்கும் நூல் என்று சொல்லுமளவு போகிறார்கள். ஆனால், ஆதி ஷங்கரர் மற்றும் ஸ்ரீ ராமானுஜரின் மரபில் வந்தவர்கள் இதன் சரியான பொருளைச் சொல்லி விளக்கி விடுகிறார்கள். அவர்கள் தரும் சரியான மொழி பெயர்ப்பு இதோ:

ஸ்ரீ ராமானுஜர் உரை:
- - - - - - - - - - - - - - - - - - -
I am wealthy and “nobly-born“; who else is equal to me? I shall sacrifice, I shall give charity, I shall rejoice’ — thus they think, deluded by ignorance.

ஆதிசங்கரர் உரை:
- - - - - - - - - - - - - - - - -
I am rich and “well-born“. Who else is
equal to me, I will sacrifice, I will give, I will rejoice.” Thus deluded by unwisdom.

ஆதி சங்கரர் “குலம்” என்பதற்கான பொருளை பிறப்பு அடிப்படையில் கிடைக்கும் தகுதி என்று சொல்லுகிறார். அதன் மூலம், பிறப்பு அடிப்படையில் கிடைக்கும் இந்த கர்வத்தை அரக்க குணம் என்கிறார். ஆதி சங்கரர் எனும் சமூக சமத்துவத்தை எங்கும் போதித்த அந்த அத்வைதிக்கு பன்னிரண்டாயிரம் கோடி நமஸ்காரங்கள் !

இவை ஆங்கில மொழி பெயர்ப்புக்கள். செம்மொழி மூலத்தில் குலம் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு இதுதான். ஸ்ரீ ராமானுஜ பாஷ்யத்தில் இப்படிச் சொல்லுகிறார்:

“ஸ்வத ஏவ உத்தமகுலே ப்ரசூத: அஸ்மி”

The demoniac think like the following examples illustrate. I am the most powerful. I was born into a “dynasty of aristocracy” and wealth. Who else in this world is equal to me? Who else by dint of their exertions have acquired every pleasure there is to enjoy and secured so much happiness and stability?

http://www.bhagavad-gita.org/Gita/verse-16-10.html

மற்ற பாஷ்யக்காரர்கள் இந்த வார்த்தைக்கான பொருளை அரிஸ்டோக்ராட் எனவும், பெரும் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் பொருள் தருகிறார்கள்.

“அபிஜனவான்” எனும் சொல்லில் ஜனம் என்பதை சமூகம், சமூகப் பிரிவு, குடி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இதில் “அபி” எனும் முன்சேர்க்கை உள்ளது. அது “அப்யதே” என்பதில் இருந்து வந்திருக்கலாம்.

அந்த வகையில் பார்த்தால்,  கிருஷ்ணர் சொல்லுவது சமூகத்தில் உள்ள “வர்க்கத்தை” என்று பொருள் கொள்வதில் தவறு இல்லை.

உயர்ந்த குலம் என்பதை “எங்கள் குடும்பம் திராவிட பாரம்பரியத்தில் வந்தது”, “நாங்கள் 7 தலைமுறையாக பகுத்தறிவுவாதிகள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் எல்லாம் பேராசிரியர்கள்”, “எங்கள் குடும்பம் பாரம்பரியமாக இடங்கை பிரிவைச் சேர்ந்தது”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் பிரம்மச்சாரிகள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் உயர்த்தப்பட்டவர்கள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் சூத்திரர்கள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் தலித்துகள்” என்று கர்வம் கொள்வதை கிருஷ்ணரும், ஆதி சங்கரரும் அரக்க குணம் என்கிறார்கள்.

குலத்தில் பிறத்தல், சாதியில் பிறத்தல், இந்தியனாகப் பிறத்தல், நடுத்தர குடும்பத்தில் பிறத்தல், ஹிந்துவாகப் பிறத்தல், தமிழனாகப் பிறத்தல், ஆணாகப் பிறத்தல், பெண்ணாகப் பிறத்தல், அலியாகப் பிறத்தல், ….

இவை அனைத்துமே பிறப்படிப்படையில் வரும் சமூக பிரிவினைகள்தான். ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவைதான். ஒன்றை மற்றொன்று பாதிக்கும்தான்.

ஆனால், பிறப்பு அடிப்படையில் வருவதால் இவை அனைத்தும் “சாதி” என்று சொல்லுவது மிகப் பெரிய பிரஷை வைத்து எல்லாவற்றின் மேலும் கறுப்பு மை தீட்டுவதாக அமைந்து விடும்.

பகவத் கீதையை கொலைகார நூல் என்று கருணாநிதி & கோ சுருக்குவது போல, அதை ஒரு சாதி ‘ஒழிப்பு’ நூல் என்று சுருக்குவதும் சரியல்ல. இத்தவறுக்குக் காரணம்  குலம் எனும் சொல், ஜாதியை மட்டுமே குறிக்கிறது என்கிற தவறான புரிதலே.

ஸர்வ நிச்சயமாக, எல்லாவிதமான தற்பெருமை மனப்பான்மைகளையும் கீழான குணமாகச் சொல்லுகிறது பகவானின் கீதை. அதன்படி, தான் பிறந்த ஜாதியை வைத்து  தன்னை உயர்ந்தவன் என்று எண்ணும் மனப்பான்மையும் நிச்சயம் கீழான குணம்தான்.

ஒரு ஸ்லோகத்தின் பொருளை தவறாகப் புரிந்துகொள்வதுதான் பிரச்சினை. மூலத்தில் இல்லாத பொருளைத் தனது விருப்பம்போல பொருள் புரிந்துகொள்வது தவறான புரிதலை உண்டாக்கி, அதனால் ஸ்லோகத்தின் நோக்கத்தை சிதைக்கிறது.

நமது முன்னோர்கள் நமக்காக தந்துவிட்டுப் போன விஷயங்களைச் சரியாகக் காக்க வேண்டிய கடன் நமக்கு இருக்கிறது. அவர்கள் என்ன பொருளில் சொன்னார்களோ அந்தப் பொருளில் மட்டுமே நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகளை திணிக்கக் கூடாது.

எங்கெல்லாம் “குலம்” என்பது வர்ணத்தை குறிக்கிறதோ அங்கெல்லாம் அந்த வர்ணத்தையும், எங்கெல்லாம் ஜாதியை குறிக்கிறதோ அங்கெல்லாம் ஜாதியையும் சேர்த்து உபயோகித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்.

குலம் எனும் வார்த்தையை சாதியைக் குறிக்க அல்லது வர்ணத்தைக் குறிக்கப் பயன்படுத்தும்போது, மிகத் தெளிவாகவே அங்கு குறிக்கப்படும் குலம், சாதி அல்லது வர்ணத்தைக் குறிக்கிறது என்பது தெரியும்படிதான் தெள்ளு தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன.

நாம் படிக்கும்போது அது சாதியைக் குறிக்கிறதா, வர்ணத்தைக் குறிக்கிறதா, அரக்க யக்ஷ மனித தேவ குலத்தைக் குறிக்கிறதா என்பது தெளிவாகப் புரியும்படி நம் தாத்தாக்களும் பாட்டிகளும் எழுதி இருக்கிறார்கள்.

வேத சமூகத்தின் வேர் குலமே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
குலம் என்றால் பல்வேறுவர்ணத்தினரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு. வேதங்களில் (மற்றும் இதிகாச புராணங்களில், பௌத்த நூல்களில்) சொல்லப்படும் அரசாட்சி முறைகள் ஜனபத, சங்க முறைகள். இந்த அரசாட்சி முறைகளை நிர்வகித்தவை குலங்கள்தான்.

ஒரு தேசத்தின் அடிமட்ட சமூக அமைப்புகளான குலங்களிடமே நாட்டின் அனைத்து அதிகாரங்களும் பரவி இருந்தன. வேத சமூகத்தின் வேர்முறை ஜனநாயக அமைப்புகளான குலங்கள் தங்களுக்கான வரையறைகளைத் தாங்களே வடிவமைத்துக் கொண்டவை. ஸ்வராஜ்ய, பௌஜ்ய, வைராஜ்ய போன்றவை இந்தவகைக் கோட்பாடுகளில் சில மட்டுமே.

இந்தக் குலங்களில் சிலவற்றின் பெயர்களே கூட இந்தக் கோட்பாட்டு முறையினை ஒட்டியே அமைந்தவை. உதாரணமாக, போஜர்கள் மற்றும் மஹாபோஜர்கள்.

மஹாபோஜர்கள் என்பவர்களை அப்படியே மொழிபெயர்த்தால் மிகப்பெரிய போஜர்கள் என்று பொருள் வரும். அவர்கள் மிகப் பெரிய போஜர்கள் என்றால், போஜர்கள் எனப்படும் இன்னொரு சங்கத்தினர்/குலத்தினர் சாதரண போஜர்கள் என்று பொருளாகிறது. அது இழிவான ஒன்றல்ல.

இந்தப் பௌஜன்ய கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட நான்கு யாதவ குலங்களைப் பற்றி மகாபாரதத்தில் பார்க்கிறோம்: அபீரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சதவதர்கள். இவர்கள் அனைவரும் யாதவர்கள்தான்.

அவர்களில் அனைத்து வர்ணத்தவரும் உண்டு. அதாவது, யாதவ பிராமணர்கள், யாதவ ஷத்திரியர்கள், யாதவ வைசியர்கள், யாதவ சூத்திரர்கள். இன்றும் யாதவ பிராமணர்கள் இருக்கிறார்கள். தங்களது பிராமண குலத்தில் திருமண உறவுகளைத் தேடும் ஒரு உதாரணம்: http://www.bandhan.com/male/yadav+brahmin/.

இந்த பௌஜன்ய கான்ஸ்டிட்யூஷனை ஏற்றுக்கொண்ட மரபினர் வெகு வெகு பிற்காலத்தில் அமைத்ததுதான் போஜராஜ்யம். சைவ உணவை உண்ட குஜராத்திகளான இவர்கள் போஜராஜாவின் தலைமையில் முகமதியர்களை துவம்சம் செய்தனர்.  அவர்களுடைய ஆக்கிரமிப்பு மசூதிகளை எரித்தனர்.

அபீரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சதவதர்கள் எனும் இந்த நான்கு யாதவ குலங்களில் வ்ருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்தான் பகவான் கிருஷ்ணன். அவருடைய ஜாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. பகவான் கிருஷ்ணர் பிறந்த குடும்பம் மட்டுமல்ல, வளர்ந்த குடும்பமும் ஷத்திரிய வர்ணத்தவராக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

'அதாவது, யாதவர் என்பது குலங்களே. அது ஜாதி அடையாளம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ ஆங்கிலேயர் திணித்த கேஸ்ட் முறையின்படி யாதவர் என்றால் கோனார் கேஸ்ட் என்று இன்று ஆகிவிட்டது'. 😦

யாதவர்கள் என்போர் ஒரு மிகப் பெரிய குலத்தினர். (ஆங்கிலேயர் விட்டுச் சென்ற காலனிய அடிமைத்தனத்தைக் கட்டிக் காக்கும் திராவிடர் கழக வீரமணி கோனார் இதை ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனெனில், இது ஆதாரபூர்வமான அறிவியல் பூர்வமான உண்மையன்றோ.)

ஒன்று திரண்ட சமூக அமைப்புகளான இவை குலம் என்கிற பெயரில் இந்திய இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றன. இவைதான் வேரடி ஜனநாயகத்தை, உலகின் முதல் ஜனநாயகக் குடியரசுகளை உருவாக்கின. நிர்வகித்தன.

இந்த குல அமைப்பு முறை தமிழகத்திலும் ஆழமாக இருந்த ஆதிகால சமூக அமைப்பு. சூரிய குல அரசர்கள், சந்திரகுலத்தவர், என்றெல்லாம் நாம் கேள்விப்படுகிறோம்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு குலத்தவரும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தங்கள் குல சின்னங்களை காசுகளில் அச்சடித்திருக்கிறார்கள். கல்வெட்டுகளில் செதுக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும்  அவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக,  சித்திரமேழியார் என்பது தமிழ்நாட்டில் இருந்த ஒரு குலம். சோழ ராஜ்யத்திற்கு உட்பட்ட குலம். இவர்கள் வடித்த கல்வெட்டு பற்றி தினமணியில் வந்த செய்தி: http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/article882973.ece

வேதங்களில் இருக்கும் இந்த குலமுறை நிர்வாகம் மற்றும் அரசாட்சி பற்றி அரிதிலும் அரிதாகத்தான் புத்தகங்கள் பேசுகின்றன. தமிழ்நாட்டில் பிரபலமான தமிழ் வரலாற்றாசிரியர்கள் குலம் குறித்து எதுவும் எழுதவில்லை.

அதனால், இதுவரை குலம் குறித்த முழுமையான ஒரு பார்வை வெளியாகவில்லை. ஆனால், தர்மத்தையும், சத்தியத்தையும் எத்தனை நாட்கள் மறைக்க முடியும்? ஆங்காங்கே இதுகுறித்துத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தித் தாளில் வந்திருப்பது போல.

இச்செய்தியின்படி, 1062ம் பொது சகாப்தத்தைச் சேர்ந்த இந்த சித்திரமேழி குலத்தார்கள் தங்களுக்கென ஒரு மெய்க்கீர்த்தி வடித்திருக்கிறார்கள். இந்த மெய்க்கீர்த்தி இதுவரை கிடைத்த மெய்க்கீர்த்திகளில் இருந்து வித்தியாசமான தகவலைத் தருகிறது. மற்ற மெய்க்கீர்த்திகள் எல்லாம் ஒரு அரசனின் புகழ் பாடுவதாக இருக்கின்றன. ஆனால், இந்த மெய்க்கீர்த்தியோ சித்திரமேழி குலத்தாரின் புகழைப் பாடுவதாக இருக்கிறது.

நான்கு வர்ணத்தினரும் சேர்ந்து ஒருங்கிணைந்த, இந்த உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும் செயல்படுகிற குலமான இந்த சித்திரமேழி குலத்தவர் வடித்த ஸாஸனம் என்றுதான் இந்த ஸாஸனத்தில் ஆரம்பிக்கிறார்கள். செம்மொழியில் இருக்கும் அந்த ஸாஸனம் இங்கனம் சொல்கிறது:

ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் "சாதுர்வர்ண
குலோத்பவ" ஸர்வலோ ஹிதார்த்தாய
சித்ரமேளஸ்ஸாஸனம்

அறம்வளர கலி மெலிய
செங்கோலே தெய்வமாகவும் திசை அனைத்துஞ்
செவிடுபடாமை சித்திரமேழி தம்மம்
இனிது நடாத்துகின்ற ஸ்ரீ ராஜேந்திர
சித்திரமேழிப் பெருக்காளரோம்

இதில்  உள்ள “சாதுர்வர்ண குலோத்பவ” என்பதைக் கவனியுங்கள். நான்கு வர்ணத்தினரும் சேர்ந்து ஒருங்கிணைந்து இந்த உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும் செயல்பட்ட குலமான இந்த சித்திரமேழி குலத்தவர் வடித்த ஸாஸனம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

அனைத்து வர்ணத்தினரும் சேர்ந்து ஒரு குலமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய ஆதாரமாகிறது. எனவே, உயர்குலம் என்பது காலனியம் விட்டுச் சென்ற OC, BC, MBC போன்றவை அல்ல.

குலம் எனும் சமூக அமைப்பின் பெருமைகள்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
'பல ஜாதியினரையும், பல வர்ணத்தினரையும் ஒன்று திரட்டி, அன்புடன் சம உரிமைகளுடன், அவர்கள் இணைந்து உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின்படி, கூடி வாழும் அமைப்பே குலம்'.

அங்கனம் கூடி வாழ்வதால் வந்தடைந்த உயர்பண்புகளை வைத்து ஒரு குலத்தை உயர்குலத்தினர் என்று மற்ற குலத்தவர்கள் அக்காலத்தில் இருந்து மதித்தார்கள் என்பது தெளிவாகிறது. நம் தமிழ் இலக்கியங்களில்கூட குலம் பற்றிய விஷயங்கள் வருகின்றன. உயர்குலத்தவரின் குணங்கள் என்ன என்று அவற்றில் பேசப்படுகின்றது.

உதாரணமாக, திருக்குறளில் குடி என்ற பெயரிலும், குலம் என்கிற பெயரிலும் குலமே போற்றப்படுகிறது.

குலம் எனும் சமூக அமைப்பில் இருப்பவன் ஈகை குணம் கொண்டவன் எனப் புகழும் குறள்:

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

மாசற்ற குலத்தைச் சேர்ந்தவன் அவனுடைய குலம் எனும் சமூக மரபுகளின் வழிச் செல்வதால் தகுதியற்றதைச் செய்ய மாட்டான் எனப் புகழும் குறள்:

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்

ஒருவன் நல்ல குணங்கள் அற்று இருப்பானேயானால், அவன் குலம் எனும் அமைப்பைச் சேர்ந்தவன்தானா என்று ஐயம் வரும் எனும் குறள்:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்

ஒருவனது பேச்சைக் கூட குலம் எனும் அமைப்பானது உயர்வானதாகவோ, தாழ்வானதாகவோ மாற்றும் என்கிற குறள்:

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

ஒரு தனி மனிதன் தனக்கு நன்மை வேண்டும் என விரும்பினால் வெட்கப்பட வேண்டிய விஷயங்களைச் செய்ய வெட்கப்பட வேண்டும். ஆனால், குலம் எனும் சமூக அமைப்பில் சேர வேண்டும் எனில் அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் எனும் குறள்:

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

மேலே உள்ள குறளின் எதிரிடையான நிலையைப் பற்றியும் சொல்கிறார் திருவள்ளுவர். வெட்கப்பட வேண்டிய விஷயங்களை வெட்கப்படாமல் செய்வதால் ஒரு தனிமனிதன் கெடுகிறான். ஆனால், குலம் எனும் சமூக மரபுகளை பின்பற்றாவிட்டால் அவனால் அந்தக் குலமே அழிந்துவிடும் என்கிறார்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

குலம் வேறு, குடி வேறு!
- - - - - - - - - - - - - - - - - - - - -

அதே போல, குடி எனும் வார்த்தையில் அவர் குறிப்பிடுவது கூட்டுக் குடும்பத்தை. குடி பற்றி சொல்லும் குறள்கள்:

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

தேடினால், இன்னும் நிறையவே கிடைக்கும்.

சனாதன மதத்தைச் சேர்ந்த நாம் ஒற்றுமையாக சாதீய உயர்வு தாழ்வு இன்றி வாழ கண்டறிந்த அமைப்பு முறையே குல அமைப்பு முறை. வேதகாலத்தில் இருந்தே சனாதனமாக, அதாவது ஆரம்பம் முடிவு இல்லாத உண்மையாக, நம்மிடையே இருந்து வருவது. இதை ஒதுக்கி நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட முடியாது என்பது என் முடிபும், துணிபுமாக இருக்கிறது.