ஊத்துமலை ஜமீன் வம்சாவளி
""""""""""""""""""""""""""""""""""""""""""""
வரலாறு சொல்லும் உண்மைகள் !!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் வம்சாவளி என்னதான் சொல்கிறது? .... இதை வைத்துக் கொண்டு முக்குலத்தோர் வரலாறை குறை சொல்வது எத்தகையதாகும்?
இந்த வம்சாவளி வரலாறு பல்வேறு சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறது! ... ஊத்துமலை என்பது நாயக்கர் அளித்த பாளையம் அல்ல என்பதும், அது பாண்டியர் அளித்த பாளையம் என்பதும், ஊத்துமலை பாளையத்திற்கு முன்பே திருச்சுழி, பள்ளி மடம் முதலிய சீமையை ஆண்டவர்கள் தென்பகுதியில் பாண்டியர் கரத்தை வலுப்படுத்த வந்து பாளையத்தை ஏற்படுத்திகொண்டனர் என்பதும் தெளிவாகிறது!
.. இனி பாண்டியனுக்கு பெண் தரவில்லை என்பதை வைத்து மறவர் பாண்டியரல்ல என வாதிடுவோர் கீழே உள்ள வம்சாவளி விளக்கம் படித்து விட்டு கேட்கட்டும் பெண் கேட்ட பாண்டியன் தூதரை பார்த்து "விஜய வரகுண மருதப்ப பாண்டியன்" கேட்ட கேள்விகளுடன் உள்ளிட்ட உரையில் இவ்விதமாக விளக்கம் வருகிறது! ...
"கொற்றவன் தன் திரு முகத்தை
கொணர்ந்த தூதா!..
குறையுடலுக்கோ மறவர் கொம்பை ? (குறையுள்ள உங்களுக்கா மறவர் மகள்? ) கோட்டயம் அற்றவர் சேர்! கோட்டை கொத்தளம் இல்லாதவர்களிடம் சென்று கேள்!திருவரங்கப் பெருமான் தோழன் (திருமங்கையாழ்வார் ) அவதரித்த திருக்குலமென்று உங்கள் மன்னர் அறியார் போல! நீ கொண்டு வந்த இந்த ஓலையின் பெயர் திருமுகமா? இதற்கு நாக்கு, வாய், செவி, கண், மூக்கு எங்கே இருக்கிறது? மன்னர் மன்னன் பெற்ற இளவரசனானாலும் இந்த பெண் பிறந்த மறக்குலத்திற்கு ஏற்ப பேசுடா!
இனி கீழ் உள்ள வசனம்! ...
பேச வந்த தூதா! .. சன்னத்த (சிறிய ) ஓலை பேசுமோ? .. பெரு அங்க இருவ அங்கு ... (இப்பகுதி குழப்பமாக உள்ளது ) பிள்ளை கேட்கிறீர்களே! ... பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து நாங்கள் கொடுத்தால்! .? பட்டமன்னர் ( மன்னர் இறந்தால் ) பட்ட தங்கள் தீய்ப்புகுந்து (உடன்கட்டை ஏறி ) பாராட வாசலுக்கு சுடும்படா? ( உங்கள் உறவு பாராட்டிய எங்கள் வாசலில் சுடுமடா) கவித்து வந்த கவிகை மாங்கிட கொடிதனை ( துள்ளி விளையாடும் மானாகிய எங்கள் பெண்ணுடைய காலும் ) நாளியும் வீசுஞ் சாமரம் போன்ற கற்றைசுற்றிலே( வீசும் கூந்தல் ) வேலியிட்டது போல வில்லும், வாளும், வேலும் சுற்றி அடைத்துக்கொள்ளும் , அரவர் (நாகர் புகலிடமாக சேர்ந்த ) புகள் மதுரை அம்பலவாணன் அவன் உறவை பெறுவதற்காக உங்களுக்கு நாங்கள் அடுமையுற்றோமா? (அடிமைப்பட்டோமா?) வரினக்குப்பத்துண்டா பெண்ணென்று சொல்லும் வேந்தன், தனக்கு பத்துண்டா தலை மறுக்குந்தான் கேட்ட வாமா? (வாமனன்?) மரைக்காட்டீசன் தீந்த தில்லை திருமகன் அன்றி பிறந்தவன்(சிவன் கூட பெண் தந்ததில்லை பெருமாளுக்கு அன்றி ) இக்காப்பானும் பெண் தருக என்றான்! .. இது இப்படியே போனால் ஒரு பாப்பான் கூட கேப்பான் போலயே? கொடுத்தோம் ஆனால் நடந்தது என்ன? இத்தல துயில் கொண்டு பாதி வனத்தில் போக விட்டார்கள்! ( சீதை? ) வெண்சிறை புக நின்றார்கள்????. துகிலுரிய விட்டு கேட்டனர் ( திரௌபதி துகிலுரி சம்பவம் ) உத்த தாரம் விரும்பி (தனக்கு ஏற்ற பெண்ணை விரும்பி) இன்னும் மன்னர் பெண் கட்ட விருப்பம் இருக்கிறதோ ?... உமியடா (போய் காறித்துப்புடா உங்க ராசா மூஞ்சிய ) மண் மென்று வாய் கிழி (மண் திங்க வைத்து அவன் வாயக்கிழி! பயபுள்ள யார்ட்ட கேக்கான் பொண்ண?) ஓலையை கரத்தில் உருட்டி செல்! அத்த நாள் வரை காத்தவாயுகளை பெற்றிடும் ........ ..
இப்படி சொல்லிக்கொண்டே போகிறது ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் வம்சாவளி. ..
இதில் மறக்குல நாச்சியார்களாக முறையே சீதை, திரௌபதி , வள்ளி எனப்பலரையும் இந்த கைபீது சொல்கிறது! வள்ளி குறத்தி என சொல்பவர்கள் .... சீதையும், திரௌபதியும் எக்குலமென்று சொல்வீர்களாக.... ,
பாண்டியனின் குலம் "மச்சம்" (மீன்) அதை தனக்குரியதாக சொல்கிறார் மருதப்பபாண்டியன். இங்கு பெண் கேட்ட பாண்டியன் என்று வருபவரை "சூரிய குலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று எடுத்துக்கொள்வது ? இங்கே அப்பொழுது மதுரை ஆண்ட பாண்டியர் ஒன்று சோழ பாண்டியராக இருக்க வேண்டும் அல்லது சேதுபதி மன்னர்களாக இருக்க வேண்டும்! ஆதலால் தன் வம்சமல்லாதார்க்கு பெண் கொடுப்பது இல்லை என்கிறார்! . இதை வைத்து மறவர் பாண்டியர் அல்ல என்பது எவ்வளவு மூடத்தனம்? .
மறவர் பாண்டியரே என்பது நிரூபணமான வரலாறு. அது மட்டுமின்றி இதே வம்சாவளியில் மறவர்களை மீனாக்ஷியின் புத்திரர்கள் எனவும் மறவரின் தோற்றம் விளக்கப்படுகிறது. கீழ் வருபவனவற்றிலிருந்து அதை அறியலாம்.,..
மலையத்துவஜபாண்டியனின் மகள் பார்வதிதேவியின் அம்சமான "தடாதகைப்பிராட்டியான மீனாக்ஷி தனது விலாப்புறத்தில் இருந்து மறவர்களைத்தோற்றுவித்தாளென்றும், வீரத்திற்காக பிறந்ததால் மறவரென்றும், பாண்டியகுலத்தினின்று உதித்தத காரணத்தால் "தேவன் " எனவும் வழங்கப்படுவீர்கள் என்றும் சொல்கிறது! இதிலிருந்தே மறவர்தான் பாண்டியர் குலம் என அறியப்படுகின்றனர்.
மேலும், கள்ளர் குலத்தவரான திருமங்கை ஆழ்வாரையும்,கண்ணப்ப நாயனாரையும் தமது குல முன்னோர்களாக சொல்கிறார். . சிலர் இதைவைத்து கண்ணப்பநாயனார் குலம் என்று குறிப்பிடுவதால் மறவர் சத்திரியர் அல்ல என வாதிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி!
மலையத்துவஜபாண்டியனின் மகள் சூத்திர குலமா? மச்சவம்சம் சூத்திரகுலமா? மறவரில் கிளை வழியுடைய கொண்டையன்கோட்டையினர் மட்டுமே தாய்வழிச்சமூகம், அதனால் தடாதகைப்பிராட்டியான பார்வதிதேவியின் புத்திரர்கள் சூத்திரரா?
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மாற்று சாதி நண்பர்களே முக்குலத்தோர் சத்திரியப்பட்டத்திற்கு ஆசைப்பட்டதுமில்லை! அதற்காக எந்த கோர்ட்டிற்கும் சென்றதுமில்லை! எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே தெரியும் யார் சத்திரியரென்று!.. சோழர் காலத்தில் தோன்றிய நால்வருணப்பாகுபாடு முக்குலத்தோரை எந்த விதத்திலும் பாதிக்காது. எங்களுக்கு மூவேந்தரில் இருந்து பிற்கால பாளையங்கள், சமஸ்தானங்கள் வரை ஆண்ட வரலாறு உள்ளது. ஆங்கிலேயர்கள் கூட தமிழகத்தில் முக்குலத்தோரையும், கேரளாவில் நாயரையும் தவிர எவரையும் இயல்பான சத்திரியர் என்று ஏற்கவில்லை! இதற்கு அவர்களே எழுதிய ஆவணங்களும் சாட்சியங்களாக இருக்கின்றன.