Thursday, May 4, 2017

ஊத்துமலை வம்சாவளியும், அதன் உண்மைகளும்!

ஊத்துமலை ஜமீன் வம்சாவளி
""""""""""""""""""""""""""""""""""""""""""""
வரலாறு சொல்லும் உண்மைகள் !!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் வம்சாவளி என்னதான் சொல்கிறது? .... இதை வைத்துக் கொண்டு முக்குலத்தோர் வரலாறை குறை சொல்வது எத்தகையதாகும்?
  
இந்த வம்சாவளி வரலாறு பல்வேறு சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறது! ... ஊத்துமலை  என்பது நாயக்கர்  அளித்த பாளையம் அல்ல  என்பதும்,  அது பாண்டியர் அளித்த பாளையம்  என்பதும், ஊத்துமலை பாளையத்திற்கு முன்பே திருச்சுழி, பள்ளி மடம் முதலிய சீமையை ஆண்டவர்கள் தென்பகுதியில் பாண்டியர் கரத்தை வலுப்படுத்த வந்து பாளையத்தை ஏற்படுத்திகொண்டனர் என்பதும் தெளிவாகிறது!

  .. இனி பாண்டியனுக்கு பெண் தரவில்லை என்பதை வைத்து மறவர் பாண்டியரல்ல என வாதிடுவோர் கீழே உள்ள வம்சாவளி விளக்கம் படித்து விட்டு கேட்கட்டும் பெண் கேட்ட பாண்டியன் தூதரை பார்த்து "விஜய வரகுண மருதப்ப பாண்டியன்" கேட்ட கேள்விகளுடன்  உள்ளிட்ட உரையில்  இவ்விதமாக விளக்கம் வருகிறது! ...

          "கொற்றவன் தன் திரு முகத்தை
கொணர்ந்த தூதா!..
குறையுடலுக்கோ மறவர் கொம்பை ?  (குறையுள்ள உங்களுக்கா மறவர் மகள்? ) கோட்டயம் அற்றவர் சேர்!  கோட்டை கொத்தளம் இல்லாதவர்களிடம் சென்று கேள்!திருவரங்கப் பெருமான் தோழன் (திருமங்கையாழ்வார் ) அவதரித்த திருக்குலமென்று உங்கள் மன்னர்  அறியார் போல!   நீ கொண்டு வந்த  இந்த  ஓலையின்  பெயர் திருமுகமா?  இதற்கு நாக்கு, வாய், செவி, கண், மூக்கு எங்கே இருக்கிறது? மன்னர் மன்னன் பெற்ற இளவரசனானாலும் இந்த பெண் பிறந்த  மறக்குலத்திற்கு ஏற்ப பேசுடா! 
இனி கீழ் உள்ள வசனம்! ...
  
பேச வந்த தூதா! .. சன்னத்த (சிறிய ) ஓலை பேசுமோ?  .. பெரு அங்க இருவ அங்கு ... (இப்பகுதி குழப்பமாக உள்ளது ) பிள்ளை கேட்கிறீர்களே! ... பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து நாங்கள் கொடுத்தால்! .?  பட்டமன்னர் ( மன்னர்  இறந்தால் ) பட்ட தங்கள் தீய்ப்புகுந்து (உடன்கட்டை  ஏறி ) பாராட வாசலுக்கு சுடும்படா? ( உங்கள் உறவு பாராட்டிய  எங்கள் வாசலில் சுடுமடா) கவித்து வந்த கவிகை மாங்கிட கொடிதனை ( துள்ளி விளையாடும் மானாகிய எங்கள் பெண்ணுடைய காலும் ) நாளியும் வீசுஞ் சாமரம் போன்ற கற்றைசுற்றிலே( வீசும் கூந்தல் ) வேலியிட்டது போல வில்லும், வாளும், வேலும் சுற்றி அடைத்துக்கொள்ளும் , அரவர் (நாகர் புகலிடமாக சேர்ந்த ) புகள் மதுரை அம்பலவாணன் அவன் உறவை பெறுவதற்காக உங்களுக்கு நாங்கள்   அடுமையுற்றோமா? (அடிமைப்பட்டோமா?)  வரினக்குப்பத்துண்டா பெண்ணென்று சொல்லும் வேந்தன்,  தனக்கு பத்துண்டா தலை மறுக்குந்தான் கேட்ட வாமா? (வாமனன்?)  மரைக்காட்டீசன் தீந்த தில்லை திருமகன்  அன்றி பிறந்தவன்(சிவன் கூட பெண் தந்ததில்லை பெருமாளுக்கு அன்றி ) இக்காப்பானும் பெண் தருக என்றான்! .. இது இப்படியே போனால் ஒரு பாப்பான் கூட கேப்பான் போலயே?  கொடுத்தோம் ஆனால் நடந்தது  என்ன?  இத்தல துயில் கொண்டு  பாதி வனத்தில் போக விட்டார்கள்! ( சீதை? ) வெண்சிறை புக நின்றார்கள்????. துகிலுரிய விட்டு கேட்டனர்  ( திரௌபதி துகிலுரி சம்பவம் )  உத்த தாரம்  விரும்பி (தனக்கு  ஏற்ற பெண்ணை விரும்பி) இன்னும் மன்னர் பெண் கட்ட  விருப்பம் இருக்கிறதோ ?... உமியடா (போய் காறித்துப்புடா உங்க ராசா மூஞ்சிய ) மண் மென்று வாய் கிழி (மண் திங்க வைத்து அவன் வாயக்கிழி! பயபுள்ள யார்ட்ட கேக்கான் பொண்ண?) ஓலையை கரத்தில் உருட்டி செல்!  அத்த  நாள் வரை காத்தவாயுகளை பெற்றிடும் ........ ..

இப்படி சொல்லிக்கொண்டே போகிறது ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் வம்சாவளி. ..
இதில் மறக்குல நாச்சியார்களாக முறையே சீதை, திரௌபதி , வள்ளி  எனப்பலரையும் இந்த கைபீது சொல்கிறது!  வள்ளி குறத்தி என சொல்பவர்கள்  .... சீதையும், திரௌபதியும் எக்குலமென்று சொல்வீர்களாக.... ,
  பாண்டியனின் குலம் "மச்சம்" (மீன்) அதை தனக்குரியதாக சொல்கிறார் மருதப்பபாண்டியன்.  இங்கு பெண் கேட்ட பாண்டியன் என்று வருபவரை "சூரிய குலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அப்படியென்றால்  என்ன  அர்த்தம் என்று  எடுத்துக்கொள்வது ? இங்கே அப்பொழுது மதுரை ஆண்ட  பாண்டியர்  ஒன்று சோழ பாண்டியராக இருக்க வேண்டும் அல்லது சேதுபதி மன்னர்களாக  இருக்க வேண்டும்! ஆதலால் தன் வம்சமல்லாதார்க்கு பெண் கொடுப்பது இல்லை என்கிறார்! . இதை வைத்து மறவர் பாண்டியர் அல்ல  என்பது எவ்வளவு மூடத்தனம்? . 

மறவர் பாண்டியரே என்பது நிரூபணமான வரலாறு. அது  மட்டுமின்றி  இதே வம்சாவளியில்  மறவர்களை மீனாக்ஷியின் புத்திரர்கள்  எனவும் மறவரின் தோற்றம் விளக்கப்படுகிறது. கீழ் வருபவனவற்றிலிருந்து அதை அறியலாம்.,..

மலையத்துவஜபாண்டியனின் மகள் பார்வதிதேவியின் அம்சமான "தடாதகைப்பிராட்டியான மீனாக்ஷி தனது விலாப்புறத்தில் இருந்து மறவர்களைத்தோற்றுவித்தாளென்றும், வீரத்திற்காக பிறந்ததால் மறவரென்றும், பாண்டியகுலத்தினின்று உதித்தத காரணத்தால் "தேவன் " எனவும் வழங்கப்படுவீர்கள் என்றும் சொல்கிறது! இதிலிருந்தே மறவர்தான் பாண்டியர் குலம்  என அறியப்படுகின்றனர்.

மேலும், கள்ளர் குலத்தவரான திருமங்கை ஆழ்வாரையும்,கண்ணப்ப நாயனாரையும் தமது குல முன்னோர்களாக சொல்கிறார். .  சிலர்  இதைவைத்து கண்ணப்பநாயனார் குலம்  என்று குறிப்பிடுவதால் மறவர் சத்திரியர் அல்ல என வாதிடுகிறார்கள்.  அவர்களுக்கு ஒரு கேள்வி! 
மலையத்துவஜபாண்டியனின் மகள் சூத்திர குலமா? மச்சவம்சம் சூத்திரகுலமா? மறவரில் கிளை வழியுடைய கொண்டையன்கோட்டையினர் மட்டுமே தாய்வழிச்சமூகம், அதனால் தடாதகைப்பிராட்டியான பார்வதிதேவியின் புத்திரர்கள் சூத்திரரா? 

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மாற்று சாதி நண்பர்களே முக்குலத்தோர் சத்திரியப்பட்டத்திற்கு ஆசைப்பட்டதுமில்லை! அதற்காக எந்த கோர்ட்டிற்கும் சென்றதுமில்லை! எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே தெரியும் யார் சத்திரியரென்று!.. சோழர் காலத்தில் தோன்றிய நால்வருணப்பாகுபாடு முக்குலத்தோரை எந்த விதத்திலும் பாதிக்காது.  எங்களுக்கு மூவேந்தரில் இருந்து பிற்கால பாளையங்கள், சமஸ்தானங்கள் வரை   ஆண்ட வரலாறு  உள்ளது. ஆங்கிலேயர்கள் கூட தமிழகத்தில் முக்குலத்தோரையும், கேரளாவில் நாயரையும் தவிர  எவரையும் இயல்பான சத்திரியர்  என்று  ஏற்கவில்லை!  இதற்கு அவர்களே எழுதிய ஆவணங்களும் சாட்சியங்களாக இருக்கின்றன.

சசிவர்ணத்தேவரின் செப்பேடுகளின் செய்திகள்!

சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள்!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
                     சிவகங்கை  ஆண்ட
சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள் காட்டும் சில செய்திகள்! ....

'புறங்கண்டல் அல்லால் இனைபடை தானை
அரசரோடு உறினும் கனைதொடை நாணும்,
கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ்
நோக்கு இரலை மருப்பின் திருந்து
மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து
ஓடா மறவர் பொருள் கொண்டு
புன்செயின் அல்லதை அன்போடு அருள்
புறம் மாறிய ஆரிடை அத்தம்.–”கடுங்கோ சேரமான்”.   

பொருள்:
-'-'-'-'-'-'-'-'-
சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள்.
அவர்கள் ஆராவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகளைப் போல,அவர்களது மீசை முறுக்கொண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர்கள் செய்யும் தொழிலே தனி வகையானது. வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.
பாடியது யார்? சேரமன்னன் “பாலை பாடிய கடுங்கோன்”.ஏனெனில் சேரனும் மறமன்னனே.
இன்னோர் சங்க பாடல்களில் பாலை நில காட்டில் தூங்கும் மறவனின் காலானது. வேட்டையாடிய சிங்கத்தின் காலைபோன்றது என புகழப்படுகின்றது

.பாண்டியன் குடிப்பெயரான "கௌரியர்" என்ற பட்டத்தை காலம் காலமாக சூடி வருபவர்கள் சிவகங்கை மன்னர்கள். இந்த பட்டம் வேறு எவரிடமும் கிடையாது. பாண்டிய நாடும் சேதுத்துறையும் கௌரியருக்கு உரியது என சங்ககாலம் செப்பும்.
சிவகங்கையை ஸ்தாபித்தது சசிவர்ணத்தேவர் என வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்க்கு முன்பே பார்த்திபனூர் அருகே அருங்குளத்திலிருந்து சிவகங்கை நாலுக்கோட்டை நெடுக மதுரை அருகே உள்ள பழையனூர் வரை பரந்து அமைந்த ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்த உடையார் கௌரி வல்லபத் தேவர்கள் ஆண்டிருந்தனர் என்ற நிருபத்தின் ஆதாரமாக திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் கோவிலில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
நாலுகோட்டைப் பாளையக்காரரான பெரிய உடையார் தேவர் அந்தப் பகுதியிலேயே மிகப் பெரும் வீரராக திகழ்ந்தார் மேலும் கடமை உனர்வுடன் இராஜ விசுவாசத்துடனும்,சேதுபதிக்கு உறுதுணையாக இருந்த செயல் மறவராவார்.அவருக்கு மூன்று மனைவியர் இருந்தனர். முதல் மனைவியை பற்றி விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்த முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் சசிவர்ணத்தேவர். இவர்களுடன் பிறந்தவர்களான திரியம்பகத்தேவரும்,லவலோசனத்தேவரும் சிறுவயதிலே இறந்துவிட்டதாக கருதப்படுகின்றது. இரண்டாவது மனைவி இராமநாதபுரத்தை சார்ந்த பெரும் போர் மறவரான சங்கரத்தேவரின் மகள் சிந்தாமணி நாச்சியார், இவர் தம் தந்தை போலவே வாள் சண்டையிலும்,சிலம்பு விளையாட்டுகளிலும் வல்லவர்.
பெரிய உடையாத் தேவர் இராஜாங்க காரியமாக அடிக்கடி இராமநாதபுரம் சென்று வருவார். அப்போது சிந்தாமணி நாச்சியாரின் வீர விளையாட்டுகளைப்பார்க்க நேர்ந்தது. நாச்சியாரின் பேராற்றலை கண்டு மனதை பறிகொடுத்து நாலுக்கோட்டையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
சிந்தாமணி நாச்சியார் மூலம் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் செல்வ ரகுநாததேவர்,மற்றொருவர் சேது பந்தன நாச்சியார். செல்வ ரகுநாத தேவர் நாலுகோட்டைப் பாளையத்திலே தங்கிவிட்டார். அங்கிருந்து கொண்டு சேதுபதிகளுக்கு உதவியாக இருந்தவர்(பிற்கால முத்துவடுகநாத தேவர் சிவகங்கையின் இரண்டாவது அரசராக முடிசூட்டிக் கொண்டபோது,நிர்வாகத்தில் அவருக்கு உதவியாக இருந்தார்).
சிந்தாமணி நாச்சியார் தனக்கு பிறந்த மக்களை விட சசிவர்ணத்தேவரிடம் மிகுந்த பாசமும் பற்றும் வைத்து இருந்தார். பெரிய உடையணத்தேவரின் மூன்றாவது மனைவியான கோவனூர் நாச்சியாருக்கு பூவுலகத்தேவர் என்னும் மகன் இருந்தார்.
பெரிய உடையணத்தேவரின் குமாரர்களில் அழகிலும் ஆற்றலிலும் சசிவர்ணத்தேவர் உயர்ந்து விலங்கினார்.
அவரது வீரப்பராக்கிரமங்களைக் கேள்விப்பட்ட விஜய ரகுநாத சேதுபதி சசிவருணத் தேவருக்கு தன் மகள் அகிலாண்டேஸ்வரியை திருமனம் செய்து வைத்தார்.
இத்திருமணத்திற்க்கு பின், தன் சம்பந்தியின் நிலையை உயர்த்த விரும்பினார். அதற்காக முன்னூறு போர் வீரர்களை வைத்துக் கொண்டிருந்த பெரிய உடைய தேவருக்கு,ஆயிரம் போர் வீரர்களை வைத்துக் கொள்ள அனுமதியளித்தார் மேலும் அவர்களுக்கான செலவுகளை ஈடு செய்து கொள்ளத் தேவையான வருவாயுள்ள
நிலப்பகுதியை அளித்தார். சசிவர்ணத்தேவரின் திருமணத்திற்கு பின் நோய்வாய்பட்ட   பெரிய உடையணத்தேவரின் மரணம், சேது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பலவீனம் ஆனது. இவரது இறுதி சடங்குகள் நாலுக்கோட்டை அருகிலுள்ள  கந்தமாதனப் பொய்கையில் நடந்தது. சந்தனக் கட்டைகளால் அடுக்கப்பட்ட சிதையில் சிந்தாமணி நாச்சியார் தன் கனவருடன் தீப்பாய்ந்து மாண்டார்.

சசிவர்ணத்தேவரின் செப்பேடுகளில் கீழ்கண்டவாறு இவ்விதம் குறிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் ....

சிவகங்கை அரசர்களின் திருநாமங்களாக ...

கவுரி வல்லபத் தேவர்
குளந்தை நகராதிபன்
அரசு நிலையிட்டான்
சசிவர்ணத் தேவர்
முத்து விஜய ரகுநாதன்
பெரிய உடையார்-எனவும்,

விருதுப்பெயரில் ஒன்றான,..
இந்துகுல சர்ப்ப கருடன்(சந்திரகுல சரப்பபக்ஷி[DRAGON])-எனவும்,

அவர்க்குரிய சின்னங்கள் மற்றும் கொடி அடையாளங்களாக,..

அனுமக் கொடி கருடக்கொடி மகரக்கொடி புலிக்கொடி
சிங்கக் கொடி யாளிக்கொடியுடையோன்- எனவும்,

சிறப்புப்பெயர்களாக, ...

பாண்டிய தேசத்தில் பொதியமாமலையான்
வைகையாருடையான்
புனல் பரளை நாடன்
கரந்தை நகராதிபன்
முத்து வடுக நாதன்
மும்மதயானையன்
பஞ்சகால பயங்கரன்
பஞ்சகதி புரவியுடையான்- எனவும் செப்பேடு செய்திகள் உணர்த்துகின்றன.